நாயகன் படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்தார். படத்தில் கமலின் கெட்டப், நடிப்பு என எல்லாமே மிரட்டலாக இருந்தது. வேலுநாயக்கராகவே வாழ்ந்த கமல், அவரது மகன் மற்றும் மகளின் நடிப்பு, ஜனகராஜின் காமெடி மற்றும் இளையராஜாவின் இசை என எல்லாமே அருமை. பம்பாய் தாதாவா வேலுநாயக்கர். இப்படி அசர வைக்கிறாரே.
வெற்றிலைப்பாக்கை வாயில் போட்டுக் குதப்பியபடி, அவர் பேசும் ஸ்டைல் அழகோ. அழகு. நாலு பேருக்கு நல்லதுன்னா நாம செய்றதுல எதுவுமே தப்பில்லன்னு சொல்வதாகட்டும், அவனை நிறுத்தச் சொல்லு நிறுத்துறேன்னு கிளைமேக்ஸில் பேசும் அந்த நீண்டவசனமாக இருந்தாலும் சரி. கமல் நடிப்பில் அசகாய சூரர்னு நிரூபித்து இருந்தார். சாதாரண சீன்ல கூட ஸ்கோர் வாங்கினார்.
நாயகன் படத்தில் அவருக்கு ஜோடியாக வரும் சரண்யாவும் நடிப்பில் மெருகேற்றி இருந்தார். நைட் பத்து மணிக்குள்ள விட்டுருவீங்களான்னு அப்பாவியாய் கேட்கும் முத்தின கத்திரிக்காய் அவரா? என்ன ஒரு யதார்த்தமான அழுத்தமான நடிப்பு என்று வியக்க வைக்கிறார்.
நாயகன் படத்தில் கமல் என்னென்ன புதுமை செய்துள்ளார்னு தெரியுமா? நாலு வகையான நடையை நடந்துள்ளார். இளவயதில் ஒரு நடை. கொஞ்சம் வயதானதும் காலை அகற்றியபடி நடை. அப்புறம் அதை விட வயதானதும் காலை அகற்றியபடி மெதுவான நடை. இன்னொரு வயதில் ரொம்ப பயங்கரமாக கையை எல்லாம் அகட்டியபடி வேகமா நடப்பாரு.
இன்னும் கொஞ்சம் உற்று நோக்கினால் பசங்க கூட துளசி மாடத்தைச் சுற்றி வரும்போது வேகமா ஓடுவாரு. வயதானதும் துளசி மாடத்தைச் சுற்றி வந்து பொண்ணை அடிக்கும்போதும், நொண்டியபடி ஓடுவாரு. இப்படி ஒரு எக்ஸலண்டை வேறு யாராலும் காட்ட முடியாது. அவர் ஒரு லெஜண்ட் என்பதாலேயே இவ்ளோ வெரைட்டியைக் காட்டி இருந்தார்.
இந்தப்படத்தை வைத்து இதே காம்போ மீண்டும் இணைந்துள்ளது என தக் லைஃபைப் போய் பார்த்தால் உங்களுக்கு ஏமாற்றம்தான். பலரும் அந்தக் காம்போவை கேலி செய்து ட்ரோல் பண்ணி வருகின்றனர். காரணம் நாயகன் மாதிரி அழுத்தமான கதை இல்லாததுதானாம்.
தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…