பாரதிராஜா இயக்கிய படத்தை பார்த்து பின்வாங்கிய கமல்.. இந்தப் படத்துக்கா?

Published on: March 18, 2025
---Advertisement---

உயிருக்கும் மேலான படம்: பாரதிராஜா இயக்கிய ஒரு படம் வெளியாக போகிறது என்று தெரிந்ததுமே கமல் தான் நடித்துக் கொண்டிருந்த ஒரு திரைப்படத்தை இப்போது ரிலீஸ் பண்ண வேண்டாம். வேண்டுமென்றால் நம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப் போடலாம் என சொல்லி இருக்கும் சம்பவம் தான் இப்போது வைரலாகி வருகின்றது. பாரதிராஜா தன் உயிருக்கும் மேலாக நினைத்து இயக்கிய திரைப்படம் தான் நிழல்கள்.

முற்றிலும் வித்தியாசமான கதைகளம். அந்த படத்தின் மீது பாரதிராஜா மிகப்பெரிய அளவில் நம்பிக்கை வைத்திருந்தார். இந்த படம் இயக்குவதற்கு முன்பு அவர் இயக்கத்தில் சுமார் ஏழு படங்கள் சில்வர் ஜூப்ளி பெற்ற படங்களாகவே இருந்தன. அதனால் நிழல்கள் படமும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது .நிழல்கள் படத்தின் ரிலீஸ் தேதியுடன்தான் பாலச்சந்தர் இயக்கிய வறுமையின் நிறம் சிவப்பு படமும் ரிலீஸ் ஆக இருந்தது.

சில்வர் ஜூப்ளி: இதை அறிந்ததும் கமல் பாலச்சந்தரிடம் பாரதிராஜாவின் படமும் அதே தேதியில் தான் ரிலீஸ் ஆகின்றன. நம் படத்தை வேண்டும் என்றால் கொஞ்சம் தள்ளிப் போடலாம் என சொல்லி இருந்தாராம். ஏனெனில் தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய படங்கள் சில்வர் ஜூப்ளி. ஆனால் நிழல்கள் படத்தை சித்ரா லட்சுமணன் பார்க்கும்பொழுது அப்பவே சித்ரா லட்சுமணன் இந்த படம் ஓடாது என சொல்லி இருக்கிறார்.

ஆனால் பாரதிராஜாவோ இளையராஜாவின் இசை இந்த படத்தைக் காப்பாற்றும். அதன் பிறகு பார் எனக் கூறினாராம்.ரீ ரிக்கார்டிங் எல்லாம் முடிந்த பிறகு மீண்டும் அந்த படத்தை இளையராஜாவின் இசையுடன் பார்த்த பொழுதும் லட்சுமணன் கதை எல்லாம் ஓகே. ஆனால் படம் கண்டிப்பாக ஓடாது என கூறியிருக்கிறார். அவர் சொன்னதை போல இந்த படம் சூப்பர் பிளாப் ஆனது.

ஏன் மணிவண்ணன்: இந்தப் படத்திற்கு கதை வசனம் எழுதியவர் மணிவண்ணன். இது மட்டுமல்ல படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். இந்த படத்திற்கு பிறகு மணிவண்ணன் கதாசிரியராக பணியாற்றிய படம் அலைகள் ஓய்வதில்லை. அதனால் ஒரு பிளாப்பான படத்திற்கு வசனம் எழுதியவரை மீண்டும் அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு எப்படி தேர்ந்தெடுப்பீர்கள் என அனைவரும் பாரதிராஜாவை கேட்டார்களாம்.

இருந்தாலும் மணிவண்ணன் மீது நம்பிக்கை வைத்து அலைகள் ஓய்வதில்லை படத்திற்கும் வசனம் எழுத சொல்லி இருக்கிறார் பாரதிராஜா. ஆனால் அந்தப் படம் எந்தளவு வெற்றி பெற்றது என அனைவருக்கும் தெரிந்த விஷயம் .இப்படித்தான் மணிவண்ணனின் கிராஃப்ட் அடுத்தடுத்து உயர்ந்து கொண்டே போனது என சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment