Categories: latest news

பத்மினிக்கு கூட சிவாஜி இப்படி முத்தம் கொடுக்கலயே!.. இளையராஜாவிடம் வாலி அடித்த கமெண்ட்!…

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவர் மீது அன்பு காட்டுவது என முடிவு செய்துவிட்டால் அதில் அளவெல்லாம் வைத்திருக்க மாட்டார். அள்ளி கொட்டி விடுவார். அவரிடம் எப்போதும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். அது அவருடன் நெருங்கி பழகியவர்கள் எல்லோருக்கும் தெரியும். நடிகர் கமல் கூட வெளியே செல்லும்போது சில சமயம் தனது இரண்டு குழந்தைகளையும் சிவாஜி வீட்டில் விட்டுவிட்டு செல்வாராம். அவர்களை மிகவும் அன்புடன் கவனித்துக்கொள்வாராம் சிவாஜி.

சினிமாவில் சிவாஜி கணேசன் போடாத வேஷம் இல்லை. முதல் படமான பராசக்தியிலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் வாங்கினார். அதன்பின் பல திரைப்படங்கள், பல கதாபாத்திரங்கள் என வாழ்ந்து காட்டினார் சிவாஜி. சாதாரண ஏழை, பெரும் பணக்காரர், போலிஸ் அதிகாரி, வழக்கறிஞர், நீதிபதி, வயதான குமாஸ்தா, ஸ்டைலான பணக்காரர், கடவுள் அவதாரங்கள், வ.உசி, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற சுதந்திர போராட்ட தலைவர்கள், ஆன்மிகவாதிகள் என அவர் ஏற்காத கதாபாத்திரங்கள் இல்லை.

அதனல்தான் அவருக்கு நடிகர் திலகம் என்கிற பட்டம் கிடைத்தது. ஆக்‌ஷன் பட விரும்பிகள் எம்.ஜி.ஆர் படம் பார்க்கப்போனால், நல்ல குடும்ப செண்டிமெண்ட் மற்றும் கதையம்சம் கொண்ட படங்களை பார்க்க விரும்பியவர்கள் சிவாஜி படம் பார்க்கபோனார்கள். சிவாஜியுடன் அதிக படங்களில் நடித்தவர் பத்மினி.

இருவருக்குமான ஜோடிப்பொருத்தம் என்பது அவ்வளவு அழகாக இருக்கும். பல படங்களில் இருவரும் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். சிவாஜியை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் பத்மினிக்கு இருந்தாலும் சில காரணங்களால் அது நடக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். பல படங்களில் இருவரும் இணைந்து நடித்தாலும் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று.

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார். தேவர் மகன் படத்தில் ‘போற்றிப் பாடடி பெண்ணே’ என்கிற பாடலில் சிவாஜி அண்ணன் சில வசனங்கள் பேசுவார். அதை ரெக்கார்ட் செய்வதற்காக என்னுடைய ரிக்கார்டிங் தியேட்டருக்கு வந்தார். அவர் பேசி முடித்ததும் அவருடன் ஒரு போட்டு எடுத்துக்கொண்டேன்.

போட்டோகிராபர் கிளிக் செய்யும்போது என் கன்னத்தில் சிவாஜி முத்தம் கொடுத்துவிட்டார். அது அப்படியே போட்டோவில் பதிவாகிவிட்டது. சிவாஜி அண்ணன் சென்றபின் அங்கிருந்த கவிஞர் வாலி ‘சிவாஜி பத்மினிக்கு கூட இப்படி முத்தம் கொடுக்கவில்லை’ என கமெண்ட் அடித்தார்’ என ஜாலியாக பேசியிருந்தார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

1 hour ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

2 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago