Categories: latest news

மண்வாசனையில் பாண்டியன் நடிக்கும் முன்பே தேர்வானவர்… ரிஜெக்ட்டுக்கு அதுதான் காரணமா?

80களில் கமல் போல அழகான நடிகர்களாக மோகன் உள்பட பலர் இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் எஸ்.என்.வசந்த். 83ல் பாரதிராஜா மண்வாசனை படத்தைத் தொடங்கினார். அதற்காக இளம் நடிகர்களை அழைத்து பாரதிராஜா ஆடிசன் நடத்தினார். அதில் தேர்வானவர் எஸ்என்.வசந்த். அவர் சென்னைக்காரர். கதையோ மதுரைக்களம்.

அதனால் அவருக்கு மதுரை பாஷை பேசுவதில் சிக்கல் ஏற்பட்டது. பயிற்சி கொடுத்தும் கேமரா முன்னால் அவரால் அப்படி பேச முடியவில்லை. அது தவிர ரேவதிக்கும் அவர் பொருத்தமான ஜோடியாக இல்லை. இதனால் வேறு ஹீரோவைத் தேட ஆரம்பித்தார் பாரதிராஜா. படத்திற்கு கமல், ரஜினி மாதிரி முன்னணி நடிகர்கள் அந்தப் படத்துக்குத் தேவைப்படவில்லை. புதுமுகம் தான் தேவையாக இருந்தது. அதனால் பாரதிராஜா தொடர்ந்து கதாநாயகன் தேடுதல் வேட்டை நடத்தினார்.

மதுரைக்கு லொகேஷன் பார்க்கச் சென்றார். அப்போது மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சாமி கும்பிட சென்றார். அங்கு வளையல் கடையில் பாண்டியன் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். பார்த்த உடனே இவன்தான் நம்ம படத்துக்கு ஹீரோ என தீர்மானித்தார் பாரதிராஜா.

ஆனாலும் எஸ்என்.வசந்திடம் பாரதிராஜா, ‘இந்தப் படத்துக்கு நீ மேட்சா இல்ல. ஆனாலும் உன்னை நான் ஏமாற்ற விரும்பல. என் தம்பி ஜெயராஜ் ஒரு படம் தயாரிக்கிறான். அதுல நீ தான் ஹீரோ’ன்னு சொன்னார். அதுதான் மெல்லப் பேசுங்கள் படம். பாரதி வாசு இயக்கினார். பானுப்பிரியா ஜோடியாக நடித்தார். இவருக்கும் இதுதான் முதல் படம்.

இந்தப் படத்துக்குப் பிறகு சில படங்களில் நடித்தார் எஸ்.என்.வசந்த். ஆனாலும் முன்னுக்கு வர முடியவில்லை. டிவி தொடர்களில் நடித்தார். 2009ல் மாரடைப்பால் காரணமானார். இவர் மட்டும் மண்வாசனையில் தேர்வாகி இருந்தால் இவரது சினிமா வாய்ப்பே பிரகாசமாகி இருக்கும். இந்த விஷயத்தை அவரே பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

57 minutes ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

2 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

3 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

16 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

16 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

22 hours ago