Categories: latest news

பிரிந்து இருந்த எம்ஜிஆர், கண்ணதாசன்… சேர்த்து வைத்த சூப்பர்ஹிட் பாடல் அதுதான்..!

கண்ணதாசனும், எம்ஜிஆரும் இருவேறு துருவங்களாகப் பிரிந்து இருந்த காலம் அது. அரசியல் காரணங்களுக்காக எம்ஜிஆரை கண்ணதாசன் கடுமையாக விமர்சிப்பார். அதனால தன்னோட படங்களுக்குக் கண்ணதாசனை பாடல் எழுத எம்ஜிஆர் கூப்பிடுறது இல்ல. அந்த நேரத்தில் அவர் வாலியைப் பயன்படுத்தினார். அதுமட்டும் அல்லாமல் ஏராளமான பாடலாசிரியர்களையும் உருவாக்கி வைத்து இருந்தார். இந்த நேரத்துல எம்ஜிஆரையும், கண்ணதாசனையும் இணைத்தது ஒரு பாடல். அந்த சுவாரசியத்தைப் பார்ப்போமா…

சிவாஜியின் பல படங்களை இயக்கியவர் பிஆர்.பந்துலு. அப்போது சில படங்கள் சரியாகப் போகவில்லை. அதனால் பொருளாதார நெருக்கடியில் இருந்துள்ளார். அந்த நேரத்துல என்ன செய்யலாம்னு பார்த்தபோது அவரது நண்பர்கள் எம்ஜிஆரை வைத்து ஒரு படம் பண்ணுங்க. எல்லா கடன் பிரச்சனையும் தீர்ந்துடும்னு சொல்லிருக்காங்க.

அதனால எம்ஜிஆருக்கு என்ன கதை பண்ணலாம்னு யோசிச்சிருக்காரு. அப்போ அவரது கதை இலாகாவில் கே.ஜே.மகாதேவன் சாகசம் நிறைந்த ஒரு கதையை சொல்ல அது அவருக்குப் பிடித்து விட்டது. உடனே பிஆர்.பந்துலு எம்ஜிஆரிடம் சொல்ல அவருக்கும் பிடித்து விட்டது. உடனே வாலியை அழைத்து நாம அடுத்த படம் பிஆர்.பந்துலுவோடு சேர்ந்து பண்ணலாம். கதை ரொம்ப நல்லாருக்குன்னு சொல்லிருக்காரு எம்ஜிஆர்.

அதுதான் ஆயித்தில் ஒருவன் படம். இந்தப் படத்தில் அடிமைகளை மீட்டுக் கொண்டு எம்ஜிஆர் கப்பலில் தப்பித்துச் செல்கிறார். மன்னரின் மகள் எம்ஜிஆரைக் காதலிக்கிறார். சுதந்திர உணர்வை பிரதிபலிக்கும் வகையில் பாடல் வேண்டும். இந்த சூழலில் அப்படி ஒரு பாட்டு தேவை. எம்எஸ்.வி. இசை அமைக்கிறார்.

இந்த சூழலுக்கு ஒரு பாட்டைப் போட்டுக் கொடுத்தால் வாலி எழுதுற பாட்டு இயக்குனருக்கும், எம்எஸ்விக்கும் பிடிக்கல. எம்ஜிஆர் வளர்த்த கவிஞர்கள் எழுதுவதும் செட்டாகல. கடைசியில எம்எஸ்வி., பிஆர்.பந்துலுவிடம் கண்ணதாசன்தான் இந்தப் பாடலுக்கு சரியா எழுதுவாரு. அவரைப் பாருங்கன்னு சொல்றாரு. நானே இப்ப தான் சிவாஜிகிட்ட இருந்து வந்துருக்கேன். என்னால போய் கொடுக்க முடியாது. நீங்க போய் பாருங்கன்னு சொல்றாரு. உடனே எம்எஸ்வி., கண்ணதாசனிடம் பேசி இருக்கிறார்.

உடனே எம்ஜிஆரிடம் எம்எஸ்வி. இதற்கு அனுமதி கேட்க உங்களுக்குப் பிடிச்சிருந்தா பாட்டு வாங்குங்கன்னு சொல்லி அனுமதி வழங்கி விட்டார். கண்ணதாசனும் முதலில் இதுகுறித்து ஆச்சரியமாகக் கேட்டு பின்னர் சம்மதித்துள்ளார். அதன்பிறகு உடனே அவசரம். போன்லயே சொல்லுங்கன்னு எம்எஸ்வி. கேட்டுள்ளார்.

அப்போது கண்ணதாசனின் அறைக்குள் ஒரு பறவை பறந்து செல்ல உடனே அவருக்கு ஒரு ஐடியா வந்துள்ளது. அதுதான் முதல் வரி. அடுத்ததாக எம்ஜிஆர் எப்படி ஆடுவார் என யோசிக்க ஒரு கையை மேலே நீட்டுவார். ஒரு கையை கீழே நீட்டுவார். அப்படின்னா என்னன்னு யோசிக்க 2வது வரி ஓகே ஆகிடுச்சு. அதுதான் ‘அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும். இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்…’ என்ற சூப்பர்ஹிட் பாடல். இது படக்குழு அனைவருக்குமே பிடித்துப் போனது. இந்தப் பாடலுக்குப் பின் பிரிந்த நட்பு ஒன்றிணைந்தது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

11 minutes ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

13 minutes ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

15 minutes ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

3 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

4 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

14 hours ago