Categories: latest news

எம்.ஜி.ஆரை சீண்டிய இயக்குனர்!.. காரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்!. ஒரு பிளாஷ்பேக்!..

எம்.ஜி.ஆருக்கு மிகவும் தீவிரமான ரசிகர்கள் இருந்தார்கள். அவரை வாழும் கடவுளாகவே பார்த்தார்கள். அதனால்தான் எம்.ஜி.ஆர் மூன்று முறை தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக இருந்தார். எம்.ஜி.ஆர் சினிமாவில் எப்படியோ அப்படித்தான் நிஜவாழ்விலும் இருப்பார் என்றே அவர்கள் நம்பினார்கள். எம்.ஜி.ஆரும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடியே வாழ்ந்துவிட்டு போயிருக்கிறார்.

கொடுத்து சிவந்த கரங்கள் என சொல்வது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பொருந்தும். தன்னால் முடிந்தவரை பல ஏழை மக்களுக்கு உதவினார். குறிப்பாக பல ஏழைகளின் வாழ்வாதாரம் உயர எம்.ஜி.ஆர் காரணமாக இருந்திருக்கிறார். அதனால்தான் அவரை மக்கள் வள்ளல் என்றே அழைத்தனர். எம்.ஜி.ஆருக்கு ஒன்றென்றால் அவரின் ரசிகர்கள் பொங்கிவிடுவார்கள்.

எங்க வீட்டு பிள்ளை படத்தின் துவக்கத்தில் எம்.ஜி.ஆரை நம்பியார் சாட்டையால் அடிப்பது போல சில காட்சிகள் வரும். இதைப்பார்த்து கொதிப்படைந்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தியேட்டரிலிருந்து வெளியேறி நேராக நம்பியார் வீட்டுக்கு போய்விட்டனர். ‘நீ எப்படி எங்கள் தலைவரை சாட்டையால் அடிக்கலாம். வீட்டை விட்டு வெளியே வா’ என ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன்பின் நம்பியார் எம்.ஜி.ஆருக்கு போன் செய்து இதை சொல்ல எம்.ஜி.ஆர் அங்கு சென்று தனது ரசிகர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

அதேபோல், ஒருமுறை நம்பியாரின் காரை மறித்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் ‘எங்க தலைவனை நீ எப்படி அடிக்கலாம்?’ என சண்டை போட்ட சம்பமும் நடந்தது. அதாவது, திரையில் பார்க்கும் சண்டை காட்சிகளை உண்மை என்றே அவர்கள் நம்பினார்கள். எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர் சாட்டையால் அடி வாங்கியதை பார்த்து சில நரிக்குறவர்கள் தங்களை சாட்டையால் அடித்துகொண்டனர். இப்படி நிறைய உதாரணம் இருக்கிறது.

60களில் குடும்ப பாங்கான படங்களை இயக்கி பிரபலமாக இருந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஜெமினி கணேசன் நடித்து வெளியான பணமா பாசமா என்கிற படம் ஆசியாவிலேயே 2வது பெரிய தியேட்டரான மதுரை தங்கம் தியேட்டரில் 100 நாட்கள் ஓடி வசூலை அள்ளியது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ‘இந்த படம் வசூல் சக்ரவர்த்திகளின் படங்களின் வசூலை முறியடித்துவிட்டது’ என எம்.ஜி.ஆரை மறைமுகாக தாக்கி பேசினார்.

பேசிவிட்டு வெளியே வந்து பார்த்தபோது அவரின் கார் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இதுபற்றி தங்கம் தியேட்டர் அதிபரிடம் முறையிட அவரோ ’மதுரையில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அதிகம். அவரின் பட போஸ்டரை பார்த்தாலே கையில் இருக்கும் பீடியை மறைத்துக்கொள்வார்கள். அந்த அளவுக்கு மரியாதை கொடுக்கும் ரசிகர்கள் எம்.,ஜி.ஆரை நீங்கள் தாக்கிப்பேசினால் சும்மா விடுவீர்களா?.. பத்திரமாக வீட்டுக்கு போங்க’ என என சொல்லி அனுப்பி வைத்தாராம்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

1 hour ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

2 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago