M.R.Radha: திரையுலகில் மிகவும் தைரியமான, மனதில் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே பேசக்கூடிய நபராக வலம் வந்தவர்தான் எம்.ஆர்.ராதா. சிறு வயதிலேயே அம்மாவுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறி நாடக கம்பெனியில் சேர்ந்தார். அங்கே நடிப்பின் பல நுணுக்கங்களையும் கற்றுகொண்டார்.
பல வருடங்களாக நாடகங்களில் நடித்த அனுபவத்தில் தனியாக நாடக கம்பெனியும் துவங்கினார். பெரியாரை பின்பற்றி கடவுள் மறுப்பு கொள்கையை கையில் எடுத்தார். அதொடு, நாடகங்களில் பகுத்தறிவு மிக்க கருத்துக்களை பேச துவங்கினார். பிராமணர்களையும், கடவுளையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால், பல எதிர்ப்புகளையும் சந்தித்தார்.
இவர் நாடகமே நடத்தக்கூடாது என போராட்டமெல்லாம் நடக்கும். அப்போதெல்லாம், இன்று இந்த நாடகம்தான் நடக்கிறது என வேறு ஒரு தலைப்பு அறிவிப்பார் ராதா. அதைப்பார்த்துவிட்டு போராட்டம் நடத்தாமல் சென்றுவிடுவார். ஆனால், ரசிகர்கள் உள்ளே வந்தபின் அவர் எந்த நாடகத்தை நடத்த நினைத்தாரோ அதையே நடத்துவார்.
எம்.ஆர்.ராதா யாருக்கும் எப்போதும் பயந்தது இல்லை. தமிழ்நாட்டிலேயே ஒரு காஸ்ட்லியான காரை முதலில் வாங்கியர் அவர்தான். அப்போது குடியரசு தலைவராக இருந்த ராதாகிருஷ்ணனுக்கு அந்த கார் ஒரு விழாவுக்கு தேவைப்பட எம்.ஆர்.ராதாவிடம் கேட்டிருக்கிறார்கள். ‘இந்த கார் இந்த ராதாவுக்குதான்.. அந்த ராதாவுக்கு அல்ல’ என தைரியமாக சொன்னாதாக ஒரு செய்தி உண்டு.
எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு நீதிமன்றத்தில் நிற்கும்போது ‘உங்கள் துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருக்கிறதா?’ என நீதிபதி கேட்டப்போது ‘நான் சுட்ட எம்.ஜி.ஆரும் சாகவில்லை. என்னை நானே சுட்டுக்கொண்டேன்.. நானும் சாகவில்லை. இப்படிப்பட்ட துப்பாக்கிக்கு லைசென்ஸ் எதற்கு?’ என கேட்டவர்தான் ராதா.
எம்.ஆர்.ராதாவின் நாடகங்களை தடை செய்ய வேண்டும் என்பதற்காக அப்போதையை காங்கிரஸ் ஆட்சி நாடக தடைச்சடம் கொண்டு வந்தது. அந்த சட்ட விவாதத்திற்கு டவுசர், பனியனோடு சபை வளாகத்திற்கு போய் அதிரவிட்டார். ஒருமுறை திருப்பதி கோவிலுக்கு குண்டு வைக்க போய் வெடி மருந்தை காய வைத்து அது வெடித்து சிறு விபத்தையும் செய்திருக்கிறார். இது போல பல அதிரடியான சம்பவங்களுக்கு சொந்தக்காரர்தான் அப்போதைய ரியல் ராக்கி பாய் எம்.ஆர்.ராதா.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…