Categories: latest news

பாடலாசிரியரைக் கேவலப்படுத்திய வித்யாசாகர்… அப்புறம் கொடுத்த மரியாதையைப் பாருங்க…!

லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் உருவான படம் ரன். படத்தில் பாடல்கள், பைட், காமெடின்னு எல்லாமே சூப்பராக இருந்தது. இந்தப் படத்தில் ‘காதல் பிசாசே’ என்று ஒரு பாடல் வரும். அது பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் பாடல் எப்படி உருவானதுன்னு பாடல் ஆசிரியர் யுகபாரதி என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

லிங்குசாமி இயக்கிய ‘ஆனந்தம்’ படத்தில் ‘பல்லாங்குழியில்’ பாடலை நான் எழுதினேன். அது பெரிய ஹிட் அடித்தது. அதனால் எனக்கு ரன் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தார். அவர் என்னை வித்யாசகரிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது நான் ஏற்கனவே எழுதிய 2 கவிதைப் புத்தகங்களைக் கொண்டு போனேன். அவர் மேலும் கீழுமாக என்னைப் பார்த்தார்.

yugabharathi

புத்தகங்களை அலட்சியமாகத் தூக்கிப் போட்டார். அப்புறம் நான் எழுதிய பல்லாங்குழி பாடலைப் பற்றி பேசும்போது அது எப்படி வட்டமாக இருக்கும்னு கேட்டார். நான் சொன்ன பதில் அவருக்குப் பிடிக்கவில்லை. தொடர்ந்து லிங்குசாமி பாடலுக்கான சிச்சுவேஷனை சொன்னார். அந்தப் பாடலில் காதலன் ஒரு கடிதம் எழுதுவதுதான் சிச்சுவேஷன். அதற்கு வழக்கம்போல நலம், நலமறிய ஆவல் அப்படிங்கற வார்த்தைகள் எதுவுமே வரக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டார் வித்யாசாகர்.

அப்படின்னா எப்படி எழுத முடியும்னு நான் அவர்கிட்ட கேட்டப்ப பதிலே சொல்ல வில்லை. தொடர்ந்து நான் லிங்குசாமியிடம் பாட்டு எழுதக்கூடாதுங்கறதுக்காகத்தான் அவர் அப்படி செய்கிறார். நான் எழுதலன்னு சொன்னார். நீ கண்டிப்பா எழுதிட்டு வா. பார்த்துக்கலாம்னு லிங்குசாமி சொன்னார். தொடர்ந்து நடுராத்திரி இந்தப் பாட்டை எப்படி எழுதுவதுன்னு யோசித்தேன்.

அப்போது ஒரு சித்தர் பாடலைப் படித்தேன். அதில் காதலியைப் பிசாசுன்னு போட்டு இருந்தது. உடனே காதல் பிசாசுன்னு ஆரம்பித்தேன். அப்புறம் என் நண்பன் ‘நன்றாக இருக்கிறாயா’ன்னு போன் பண்ணிக் கேட்டான். ‘இருக்கிறேன்’ என்றேன். ‘ஒண்ணு நல்லா இருக்கேன்னு சொல். இல்லைன்னா இல்லைன்னு சொல். ரெண்டுக்கும் நடுவுல இப்படி சொன்னா எப்படி’ன்னான். உடனே எனக்கு ‘சௌக்கியம்’ என்ற வார்த்தை மனதில் பட்டது. தொடர்ந்து ‘காதல் பிசாசே காதல் பிசாசே ஏதோ சௌக்கியம் பரவாயில்லை’ என்று எழுதினேன்.

kathal pisase song

பாடல் வரிகளை எழுதி விட்டுச் சென்ற போது வாகன விபத்து. இந்த நிலையில் இப்படியே செத்துட்டா பரவாயில்லைன்னு நினைச்சேன். தொடர்ந்து அந்த வார்த்தையையும் எழுதினேன். அப்படித்தான் அந்தப் பாடல் உருவானது. அதைக் கொண்டு போய் வித்யாசகரிடம் கொடுத்தேன்.

கண்டிப்பா நல்லா இல்லைன்னு சொல்வாருன்னு நினைச்சேன். ஆனா அது சூப்பரா இருக்குன்னு சொல்லி இனி நீதான் என் எல்லா பாடல்களையும் எழுதணும்னு சொல்லிட்டார். அப்படி அவருக்கு கிட்டத்தட்ட 300 பாடல்கள் வரை எழுதிருக்கேன் என்றார் யுகபாரதி.

sankaran v

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

5 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

6 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

7 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

8 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

8 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

14 hours ago