Categories: latest news

தற்கொலை பண்ணிக்கப் போன எஸ்.ஜே.சூர்யாவுக்கு வாழ்க்கை கொடுத்தேன்!.. தயாரிப்பாளர் பகீர் பேட்டி!…

SJ Suriyah: சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்து ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்தவர்தான் எஸ்.ஜே.சூர்யா. பல முயற்சிகளுக்கு பின் வஸந்த் இயக்கிய ஆசை படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்தார். அதன்பின் லிவிங்ஸ்டனின் சில படங்களில் வேலை செய்தார்.

ஆசை படத்தில் வேலை செய்த போது அஜித்தின் அறிமுகம் கிடைத்தது. அதை வைத்தே வாலி படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவர் மீது அஜித் வைத்த நம்பிக்கையில் வாலி படம் உருவாகி சூப்பர் ஹிட் அடித்தது. எஸ்.ஜே.சூர்யா கதை சொல்லும் விதத்தை பல பத்திரிக்கைகளும் பாராட்டி எழுந்தியிருந்தார்கள்.

வாலி படம் ஹிட் என்பதால் விஜயை வைத்து குஷி படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த படத்திற்கு பின் தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து ஒரு படம் இயக்கினார். அந்த படம் ஓடவில்லை. அதன்பின் தமிழில் தான் இயக்கிய படங்களில் அவரே ஹீரோவாக நடிக்க துவங்கினார். நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்கள் அப்படி வெளியானது.

இந்த படங்களால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அதன்பின் இயக்கத்தைவிட்டு சினிமாவில் நடிக்கும் வேலையை மட்டும் செய்ய துவங்கினார். பெரும்பாலும் வில்லன் வேடங்கள் கிடைத்தது. மாநாடு படம் அவருக்கு பேர் வாங்கி கொடுத்தது. மேலும், விஷாலுடன் இணைந்து நடித்த மார்க் ஆண்டனி படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படங்களுக்கு பின் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக எஸ்.ஜே.சூர்யா மாறிவிட்டார்.

துவக்க காலத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட எஸ்.ஜே.சூர்யா இப்போது கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். இந்நிலையில், தற்கொலை செய்யும் முடிவில் இருந்த எஸ்.ஜே.சூர்யாவை காப்பாற்றியதாக தயாரிப்பாளர் டி.ஆர்.ரமேஷ் கூறியிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா தயாரித்து இயக்கி நடித்த படங்கள் ஓடவில்லை. நஷ்டம் ஏற்பட்டு சம்பாதித்த பணமெல்லாம் போய்விட்டது.

நடிக்கவோ, படத்தை இயக்குவோ யாரும் அவரை அழைக்கவில்லை. எனவே, விரக்தியில் தற்கொலை செய்துகொள்ளலாம் என அவர் முடிவெடுத்தார். நான்தான் அவரை மீட்டு நான் இருக்கிறேன் என நம்பிக்கை சொல்லி இசை படத்தை இயக்கும் வாய்ப்பை வாங்கி கொடுத்தேன். அப்போது நான் இல்லையெனில் இப்போது எஸ்.ஜே.சூர்யா இல்லை’ என சொல்லி அதிர்ச்சி கிளப்பியிருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

5 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

7 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

7 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

8 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

9 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

15 hours ago