Categories: latest news

எனக்கு இது செட்டே ஆகாது!. ரஜினி நடிக்க தயங்கிய படம்!.. அட அந்த சூப்பர் ஹிட் படமா?!..

Rajinikanth: ஒரு இயக்குனர் ஒரு நடிகருக்கு கதை சொல்வார். அந்த கதை பிடித்திருந்தால் அந்த நடிகர் நடிக்க சம்மதிப்பார். சில சமயம் இயக்குனர்களின் மீதுள்ள நம்பிக்கையில் ஒரு நடிகர் ஒரு படத்தில் நடிக்க சம்மதிப்பார். ஒரு வரியில் மட்டும் கதை கேட்பார்கள். சில நடிகர்கள் முழுக்கதையையும் கேட்டுவிட்டே நடிக்க சம்மதிப்பார்கள். இது மாறுபடும்.

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 25க்கும் மேற்பட்ட படங்களில் ரஜினி நடித்தார் என்றால் அது இயக்குனரின் மீது உள்ள நம்பிக்கைதான். அப்படி அவர் நடித்த பெரும்பலான படங்களை கதை, வசனம் எழுதி தயாரித்தவர் பஞ்சு அருணாச்சலம்தான். அவர்தான் ரஜினியை ஜனரஞ்சக நடிகராக மாற்றினார்.

இயக்குனர் பாலச்சந்தரே ‘ரஜினியை நான் அறிமுகம் செய்திருக்கலாம். ஆனால், அவரை ஒரு ஸ்டாராக மாற்றியது பஞ்சு அருணாச்சலம்தான்’ என சொல்லி இருக்கிறார். ரஜினிக்கு முதலில் ஒரு லட்சத்தை சம்பளமாக கொடுத்தவர் பஞ்சு அருணாச்சலம்தான். பிரியா படத்தில் அது நடந்தது.

ரஜினியின் திரை வாழ்வில் சில படங்களில் நடிக்கும்போது ‘இது நமக்கு செட் ஆகுமா?.. இந்த படம் வெற்றி பெறுமா?’ என்கிற சந்தேகம் ரஜினிக்கே வந்திருக்கிறது. ‘இந்த படத்திலிருந்து விலகி விடலாமா’ என்றெல்லாம் கூட அவர் யோசித்திருக்கிறார். ஆனால், அப்படி அவர் யோசித்த படங்கள் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது.

ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ராஜாதி ராஜா`படம் கூட நடிக்கும்போது ரஜினிக்கு பிடிக்கவில்லை. சுந்தர்ராஜனுக்கும், ரஜினிக்கும் இடையே சின்க் ஆகவில்லை. இந்த படம் ஓடாது என்றே ரஜினி நடித்திருக்கிறார். ஆனால், அந்த படம் சூப்பர் ஹிட் அடித்து ரஜினியையே ஆச்சர்யப்படுத்தியது.

அதேபோல், பஞ்சு அருணாச்சலம் கதை, வசனம் எழுதி ராஜசேகர் இயக்கத்தில் ரஜினி நடித்த படம்தான் ‘தம்பிக்கு எந்த ஊரு’. இந்த படத்தில் ரஜினியுடன் செந்தாமரை, மாதவி, சுலக்‌ஷனா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு கிராம பகுதிகளில் நடந்தது. பஞ்சு அருணாச்சலம் கேட்டதால் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் ரஜினி.

ஆனால், படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த பின் ’ஏதோ லவ் ஸ்டோரின்னு சொன்னீங்க.. ஆனா, காட்டுக்குள்ள வேலை பார்க்க விடுறீங்க.. எனக்கு இது செட் ஆகுமான்னு தெரியல’ என சொல்ல, பஞ்சு அருணாச்சலம் ‘நஷ்டமானா எனக்குதான் ஆகும். நீ தைரியமா நடி. நான் பாத்துக்கிறேன்’ என சொல்லியிருக்கிறார். அப்படி ரஜினி நடித்து வெளியான ‘தம்பிக்கு எந்த ஊரு’ படம் சூப்பர் ஹிட் அடித்தது. 70 கிட்ஸ்களின் ஃபேவரைட் காதல் பாடலான ‘காதலின் தீபம் ஒன்று’ பாடல் இந்த படத்தில்தான் இடம் பெற்றிருந்தது.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

46 minutes ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

48 minutes ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

50 minutes ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

4 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

5 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

14 hours ago