Categories: latest news

இளையராஜா பற்றி ரஜினி என்ன சொன்னாரு? இன்னைக்கும் ரசிக்க இதுதான் காரணமா?

இப்போதெல்லாம் தமிழ்ப்படங்களில் ஒரு உத்தியைப் பயன்படுத்துகிறார்கள். பழைய பாடல்களை மீண்டும் பயன்படுத்துவதுதான். அந்தக் காலத்தில் போற போக்கில் அதைப் பயன்படுத்தி விட்டுப் போவார்கள். ஆனால் இப்போது பழைய பாடல்களுக்குக் கொடுக்குற முக்கியத்துவத்தைப் புதிய பாடல்களுக்குக் கூட தருவதில்லை. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் இருந்து இந்த உத்தி அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன்பே லோகேஷ் கனகராஜின் பல படங்களுக்கு இந்த உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இளையராஜாவிடம் இதுபோன்ற பல படங்களில் கேட்காமலேயே பாடல்களைப் பயன்படுத்தி விடுகின்றனர். அதன்பிறகு காபிரைட் வழக்கு தொடுக்கிறார். பிரச்சனை பூதாகரமாக வெடிக்கிறது. எந்த காலத்திலும் இளையராஜாவின் பாட்டு, பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் சசிக்குமார் எழுதி இயக்கி நடித்த படம் சுப்பிரமணியபுரம்.

அதுல முழுக்க முழுக்க இளையராஜாவின் பாடலைப் பயன்படுத்தித் தான் எடுக்கப்பட்டது. குட் பேட் அக்லியில் 3 பாடல்கள் பயன்படுத்தப்பட்டது. அது ஏற்படுத்திய தாக்கம்தான் படத்திற்கு அவ்ளோ பெரிய வெற்றி கிடைத்தது. ஆனா அவர்கள் நன்றி கெட்டவர்கள்னு நிரூபிச்சிட்டாங்க. நாங்க அந்த மியூசிக் கம்பெனியில வாங்கிட்டோம். இவருக்கு எதுக்கு காசு கொடுக்கணும்னு சொல்லிட்டாங்க.

ரெட்ரோ படத்துல ரஜினியோட ஜானில இருந்து செனோரிட்டா என்ற பாடலை முழுமையாகப் பயன்படுத்தினாங்க. நாளை வெளியாக உள்ள தொடரும் என்ற மோகன்லால் படத்தில் இளையராஜாவுக்கு நன்றி சொல்லி விடும் டைட்டில் கார்டு போடப்படுகிறது. தொடர்ந்து அவரது பாடல்களையும் படத்தில் பயன்படுத்தி உள்ளார்களாம். இன்னும் வரும் ஒரு டஜன் படங்களுக்கு இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த அனுமதி கேட்டு வந்து நிற்கிறார்களாம்.

நல்ல இசை என்றும் மக்கள் மனதில் நிற்கும். அன்னக்கிளி பாட்டு அன்னைக்கே இருந்து இன்று வரை பேசும். இளமை இதோ இதோ பாடல் என்னைக்குமே பேசும். ரஜினி இளையராஜா பற்றி சொல்லும்போது ராஜா சார் வந்து இசை சாமி. பல பேரை வாழ வச்ச சாமி. பல தயாரிப்பாளர்களை வாழ வைத்த கடவுள். இசைஞானி இளையராஜா என்று இளையராஜாவின் 1000மாவது படவிழாவில் தெரிவித்துள்ளார். அது 100 சதவீத உண்மை. இன்னைக்கு எத்தனையோ தயாரிப்பாளர்கள் ப்ரீயா இசை அமைத்துக் கொடுத்ததாக சொல்கின்றனர்.

பிரதாப் போத்தன், சங்கிலி முருகன், பி.வாசுன்னு பலர் அந்தப் பட்டியலில் இருக்காங்க. இப்போ வரை இளையராஜாவின் இசையை ரசிக்கிறாங்கன்னா ஒரு மனிதனுக்கு ரசனை சரியா இருக்கு என்பதுதான் பொருள். ரசனை சரியாக இருந்தால் தான் சரியான விஷயத்தைப் பேச முடியும்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

6 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

7 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

8 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

9 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

9 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

16 hours ago