Categories: latest news

அதுல இருந்து முடிவு பண்ணேன்.. குஷ்பூவின் அழுகைக்கு பின் மனமாறிய சுந்தர் சி

வெற்றி இயக்குனர்: தற்போது ஒரு வெற்றி இயக்குனராக சுந்தர் சி தமிழ் சினிமாவில் அறியப்பட்டு வருகிறார். தான் எத்தனையோ சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தும் அந்த வெற்றி இயக்குனர் என்ற லிஸ்டில் எப்போதுமே என்னுடைய பெயர் இருந்ததில்லை என சுந்தர் சி வருத்தப்பட்டதுண்டு. ஆனால் இப்போது அந்த நிலைமையே மாறியிருக்கிறது. ஒட்டுமொத்த சினிமாவுமே அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

தைரியம் வேண்டும்: அதற்கு காரணம் மதகஜராஜா திரைப்படம். 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படத்தை துணிந்து இப்போது ரிலீஸ் செய்து மாபெரும் வெற்றிவாகை சூடியிருக்கிறார் சுந்தர் சி. எல்லாருக்குமே ஒரு பயம் இருக்கும். இப்போதைய காலகட்டத்தில் இந்தப் படம் வொர்க் அவுட் ஆகுமா ஆகாதா என்று. ஆனால் தைரியமாக படத்தை ரிலீஸ் செய்து இன்று வரை மதகஜராஜா படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மீட்டெடுத்தவர் சுந்தர் சி: அதை போல் கடந்த வரும் தமிழ் சினிமாவே தத்தளித்துக் கொண்டிருந்த போது அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கி அந்தப் படத்தின் மூலம் ஓரளவும் சினிமாவை மீட்டெடுத்தவரும் சுந்தர் சிதான். ஆனாலும் ரசிகர்களின் மன நிலை லோகேஷ், நெல்சன், என பெரிய பெரிய இயக்குனர்களின் பக்கம்தான் திரும்புகிறது. ஆனாலும் சுந்தர் சிக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. இந்த நிலையில் சுந்தர் சி தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சோகமான சம்பவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். ஒரு சமயம் மிகுந்த பணக்கஷ்டத்தில் இருந்தாராம். அப்போது எடுத்த ஒரு முடிவை பற்றி பேசியிருக்கிறார். இதோ அந்த விவரம்:

டேக்ஸ் பிரச்சினை: ஒரே ஒரு முடிவுதான் எடுத்தேன். நான் விக்கிற கடைசி சொத்து இதுவாகத்தான் இருக்கணும்னு. ஏனெனில் நான் முதன் முதலில் வாங்கிய ஒரு வீட்டை விற்றேன். அதற்கு அன்பே சிவம் படம் ஓடலைனு அர்த்தம் இல்ல. எனக்கு வர வேண்டிய பணம் வரல. நிறைய டேக்ஸ் பிரச்சினை. அதுமட்டுமில்ல பேங்க் அக்கவுண்ட் எல்லாம் சீஸ் பண்ணிட்டாங்க. இப்ப இருக்கிற மாதிரி உலக அறிவுலாம் அப்போ கிடையாது. அப்போ நான் ஈஸியா கடன் வாங்கிருக்கலாம்.

அப்போ ஒரு கோவத்துல இருந்தேன். ரோஷத்துல ஜெயித்துக் காட்டுறேன் பாருனு முதல்ல அந்த இடத்தை வித்துட்டேன். இடத்தை வித்து அப்போ இருக்கிற பிரச்சினையை எல்லாம் தீர்க்கும் போதுதான் எனக்கு தெரியும். அந்த இடத்துல என் மனைவிக்கு இருந்த செண்டிமெண்ட் எந்தளவுக்கு என. அதுவரைக்கும் தெரியாது. நானும் அடிப்படையில் செண்டிமெண்டான ஆளும் கிடையாது. இடத்தை வித்ததும் மனைவி ரொம்ப அழுதாங்க. அது என்னை மிகவும் பாதிச்சது. அதிலிருந்து முடிவு பண்ணேன். இனிமேல் அவங்கள அழ வைக்கக் கூடாதுனு முடிவு பண்ணேன். இப்போ வரைக்கும் என் மனைவி மற்றும் மகள்களை மிகவும் சந்தோஷமாக வைத்திருக்கிறேன் என சுந்தர் சி கூறினார்.

ராம் சுதன்

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

3 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

4 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

5 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

18 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

19 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

24 hours ago