Categories: latest news

வாய்ப்பு கேட்ட போனவர் பெயரை வைத்து பாட்டு எழுதிய டி.ஆர்!.. அட நம்ம சிம்பு பாட்டு!…

T Rajendar: தமிழ் திரையுலகில் சகலகலா வல்லவனாக வலம் வந்தவர் டி.ராஜேந்தர். தன்னம்பிக்கையின் உச்சம் என இவரை சொல்லலாம். கல்லூரியில் படிக்கும்போதே டேபிளில் தாளம் தட்டி பாட்டு பாடுவார். அதனாலேயே இவரை சுற்றி நண்பர்கள் கூட்டம் எப்போதும் இருக்கும். நல்ல தமிழ் புலமை கொண்டவர் என்பதால் வார்த்தைகள் இவருக்கு அருவி போல கொட்டும்.

இவர் முதலில் இயக்கிய ஒரு தலை ராகம் படமே சூப்பர் ஹிட். இத்தனைக்கும் அறிமுக இயக்குனர் என்றால் படம் வியாபாரம் ஆகாது என்பதற்காக இயக்குனர் என இவரின் பெயரை டைட்டில் போட்டிருக்க மாட்டார்கள். படம் தியேட்டரில் வெளியாகி 2 வாரங்கள் கழித்துதான் கூட்டம் வர துவங்கியது. இப்படித்தான் சினிமாவில் நுழைந்தார் டி.ராஜேந்தர்.

அதன்பின் உறவை காத்த கிளி, மைதிலி என்னை காதலி, என் தங்கை கல்யாணி, ஒரு தாயின் சம்பதம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களையும் இயக்கி நடித்தார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், கலை, இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு, தயாரிப்பு என பல வேலைகளையும் பார்த்தவர் இவர் மட்டுமே.

இவரின் படங்களும், பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. ரஜினி படம் வெளியாகும்போது டி.ஆர். படம் வெளியானால் டி.ஆரை தொடார்பு கொண்டு ‘உங்கள் படத்தின் ரிலீஸை தள்ளி வைக்க முடியுமா?’ என ரஜினியே கேட்ட சம்பவங்களெல்லாம் நடந்திருக்கிறது.

மகன் சிம்பு சிறுவனாக இருக்கும்போதே சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து அவரை ஒரு நடிகராக மாற்றிவிட்டார். சிம்பு இப்போது முன்னணி நடிகர்களின் வரிசையில் இருக்கிறார். டி.ஆர். படம் இயக்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஊடகங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் மிகவும் தடாலாடியாக பேசுவார். இவர் பேசிய வீடியோக்கள் எல்லாமே இணையத்தில் வைரல்தான்.

இந்நிலையில்தான், நடிகர் காதல் சுகுமார் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். காதல் அழிவதில்லை படம் உருவாகி கொண்டிருந்த நேரத்தில் டி.ஆர். சார் ஆபிசுக்கு போனேன். அந்த படத்தில் வரும் ஒரு காதல் பாடலுக்கு முதல் வரி அமையவில்லை என சொல்லிக்கொண்டிருந்தார். நான் உடனே ‘என் பெயரை வச்சி எழுதுங்க சார்’ என் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். ஆனா, அவர் உண்மையாவே என் பெயரை வச்சி பாட்டை எழுதிட்டாரு. அதுதான் அந்த படத்தில் வரும் ‘மாரா மாரா சுகுமாரா’ என சொல்லியிருக்கிறார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

10 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

11 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

11 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

13 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

19 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

20 hours ago