Categories: latest news

அந்தப் படத்தின் கதையை உல்டா பண்ணி எடுத்ததுதான் வான்மதி படமா.. இவ்ளோ விஷயம் இருக்கா?

காதல் கோட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக மாறியவர் இயக்குனர் அகத்தியன். இந்தப் படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இதன் மூலம் முதன் முதலில் ஒரு இயக்குனருக்கு தேசிய விருது கிடைத்தது இவருக்குத்தான்.காதல் கோட்டை படத்திற்கு முன்பாகவே அஜித்தை வைத்து வான்மதி என்ற படத்தை இயக்கியவரும் அகத்தியன் தான்.

வான்மதி படம் எப்படி உருவானது என்பதை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் அகத்தியன். ஒரு தயாரிப்பாளரிடம் கோகுலத்தின் சீதை கதையை எடுத்துக் கொண்டு போயிருக்கிறார் அகத்தியன். ஆனால் அந்த தயாரிப்பாளர் இதை விக்ரமன் பண்ணட்டும். நீங்கள் வேறு ஏதாவது ஒரு ஜாலியா இளைஞர்களுக்கான படமாக கொடுங்கள் என்று கேட்டாராம்.

உடனே அகத்தியன் எனக்கு ஜாலியா எல்லாம் படம் பண்ண தெரியாது என்று சொல்லியிருக்கிறார். இருந்தாலும் மூன்று பெண்குழந்தைகள் இவர்களை வைத்து தன் குடும்பத்தையும் சர்வே பண்ண வேண்டும் என்று நினைத்துக் கொண்டு ஓகே பண்ணிவிடலாம் என முடிவெடுத்து மதுமதி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ஆனால் அந்தப் படத்தை இன்னும் பார்த்தாலும் அகத்தியனுக்கு சிரிப்புதான் வருமாம்.

அந்தளவுக்கு எவ்வளவுக்கு இறங்கி கூத்தடிக்கணுமோ அப்படி இளசுகளுக்கான படமாக எடுத்திருக்கிறார். அவ்வளவு அபத்தமாக இருந்ததாம். இந்தப் படத்தை பற்றி ஒரு வாரப்பத்திரிக்கையிலும் மது இருக்கும் இடத்தில் மதி இல்லை என்று எழுதியிருந்தார்களாம். ஆனால் இது உண்மையான விஷயம் தான். ஏனெனில் படத்தில் ஒரு சின்ன அறிவு கூட இருக்காது என அகத்தியன் கூறினார்.

ஆனால் படம் 140 நாள்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. அதிலிருந்து பார்க்கிறவர்கள் எல்லாருமே மதுமதி மாதிரி படம் கொடுங்கள் என கேட்க ஆரம்பித்துவிட்டார்களாம். இப்படியே ஒரு இரண்டு வருடம் போக சிவசக்தி பாண்டியன் அகத்தியனை வைத்து ஒரு படம் பண்ணலாம் என முடிவெடுத்தாராம். அப்போது அகத்தியன் சிவசக்தி பாண்டியனிடம் வித்தியாசமான காதல் கதை என சொல்லி காதல் கோட்டை படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்தாராம்.

அதற்கு சிவசக்தி பாண்டியன் வித்தியாசமான கதை எல்லாம் வேண்டாம். மதுமதி மாதிரி ஒரு கதை இருந்தால் சொல்லுங்க என்று கேட்க உடனே அகத்தியன் மதுமதி கதையையே உல்டா செய்து வான்மதி கதையாக சொல்லியிருக்கிறார். கதை எல்லாம் ஒன்றுதானாம். மதுமதி படத்திலும் தங்கர் பச்சான் தான் கேமிராமேன். வான்மதி படத்திலும் தங்கர் பச்சான் தான் கேமிரா மேன். உடனே தங்கர் பச்சான் இந்த கதையைத்தான் நாம் ஏற்கனவே பண்ணிவிட்டோமே என சொல்ல சும்மா இரு. பார்த்துக்கலாம் என வான்மதி படத்தை அகத்தியன் எடுத்து கொடுத்தாராம்.

ராம் சுதன்

Recent Posts

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

37 minutes ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

1 hour ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

2 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

8 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

10 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

10 hours ago