எந்த படமும் செய்யாத சாதனையை செய்த சூர்ய வம்சம்!.. இப்பவரைக்கும் ரெக்கார்டுதான்!...

Suriya vamsam movie: தமிழ் திரையுலகில் மென்மையான திரைப்படங்களை இயக்கியவர் விக்ரமன். புது வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். அறிமுக இயக்குனரை வைத்து ஆர்.பி.சவுத்ரி சூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம் இது. அதன்பின் தொடர்ந்து புதிய மன்னர்கள், பூவே உனக்காக, உன்னை நினைத்து, சூர்ய வம்சம், வானத்தை போல, மரியாதை உள்ளிட்ட பல படங்களையும் இயக்கினார்.
இவர் இயக்கியதில் பூவே உனக்காக, சூர்ய வம்சம், வானத்தை போல ஆகிய படங்கள் நல்ல வசூலை பெற்றது. கடந்த பல வருடங்களாகவே விக்ரமன் திரைப்படங்களை இயக்குவது இல்லை. ஆனால், ஊடகங்களில் தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருகிறார்.
வானத்தை போல படத்தில் விஜயகாந்துடன் ஏற்பட்ட அனுபவம், உன்னை நினைத்து படத்தில் இருந்து விஜய் விலகி சூர்யா நடிக்க வந்த காரணம் என பலவற்றையும் அவர் பகிர்ந்து கொண்டார். விஜய்க்கு பூவே உனக்காக போல சென்னைக் காதல் படத்தை எடுத்தார். ஆனால், அந்த படம் ஓடவில்லை.
புதிய மன்னர்கள் படத்தை எடுத்தபோது அதில் பல காட்சிகளில் பழைய பாடல்கள் இடம் பெற்றிருந்தது. படத்தின் வீரியத்தையே அது குறைக்கும். அதை எடுத்துவிடுங்கள் என அப்படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லியும் அவர் கேட்கவில்லை. இதனாலேயே அந்த படம் தோல்வி அடைந்ததாக சொல்லியிருந்தார்.
மேலும், சூர்ய வம்சம் செய்த சாதனை பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார். தமிழ் திரையுலக வரலாற்றில் மிகவும் அதிகம் பேர் வந்து பார்த்த திரைப்படம் சூர்ய வம்சம். சன் டிவியில் எப்போது போட்டாலும் அதிக டி.ஆர்.பியை பெற்ற திரைப்படமும் சூர்ய வம்சம்தான். யுடியூப்பில் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் 70 கோடி பேர் பார்த்து ரசித்த திரைப்படம் அது. எனவே, அந்த படத்தை மீண்டும் எடுத்தால் எல்லாம் சரியாக அமையவேண்டும். எனவே, அந்த பிரஸ்ஸர் வேண்டாம் என்பதால் அதை மீண்டும் எடுக்கும் வேலையில் நான் ஈடுபடவில்லை’ என சொல்லியிருக்கிறார்.
ஒருபக்கம், சரத்குமார் எங்கு போனாலும் சூர்ய வம்சம் 2 படத்தில் எப்போது நடிப்பீர்கள் என்கிற கேள்வி துரத்தி வருகிறது. ஆர்.பி.சவுத்ரி அந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கதை விவாதமும் நடந்து வருகிறது. விரைவில் துவங்குவோம் என சொல்லி வருகிறார்.