ஜெய்சங்கரின் கண்கள் சின்னதா இருக்கு... வேணாம்னு சொன்ன ஏவிஎம்..! எந்தப் படம்னு தெரியுமா?

by SANKARAN |
jaisankar
X

மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் ஒரு நல்ல மனிதாபிமானி. அவர் தனது பிறந்தநாளன்று அன்னதானம் செய்வது வழக்கம். அவருக்குத் திரை உலகில் நண்பர்களே இல்லாதவர் இல்லை எனலாம். அந்தளவு மிகப்பெரிய நண்பர்கள் வட்டாரத்தைப் பெற்று இருந்தவர் ஜெய்சங்கர். அவருக்குத் தயாரிப்பாளர்கள் வரிசையில் ரொம்ப நெருக்கமாக இருந்தவர்கள் ஏவிஎம் சரவணனன், பாலசுப்பிரமணியம், எம்.குகன்.

ஏவிஎம் தயாரிப்பில் ஜெய்சங்கர் முதலில் நடித்தது குழந்தையும் தெய்வமும். அது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்னாலேயே ஜெய்சங்கர் ஏவிஎம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்திருக்க வேண்டியது.

அதற்காக அவருக்கு மூவி டெஸ்ட் எல்லாம் எடுத்தாங்க. தனக்குத்தான் அந்த வாய்ப்புன்னு திடமாக நம்பிக்கொண்டு இருந்தார். அந்தப் படத்தின் பெயர் அன்னை. அதில் ஜெய்சங்கர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஒரு தெலுங்aகு நடிகர். அந்தப் படத்தில் ஜெய்சங்கர் நடிக்க முடியாமல் போகக் காரணம் அவரது கண்கள் சிறியனவாக இருக்கு என்பதுதான்.

அதனால் உணர்ச்சிகளைக் கடத்த முடியாதுன்னு சொல்லி ஏவிஎம் நிராகரிச்சிட்டாங்க. அந்தப் படத்தில் ஜெய்சங்கருக்கு ஏவிஎம் வாய்ப்பு தராததுகூட ஒருவகையில் நல்லதுதான். அந்தப் படத்தில் நடித்து இருந்தால் அவருக்கும் 2ம் கதாநாயகன் வாய்ப்புதான் கிடைத்து இருக்கும். இரவும் பகலும் படத்தில் அவர் முழுக்க முழுக்க கதாநாயகனாக நடித்து இருந்தார்.


ஜோசப் தலியத்தின் இயக்கத்தில் ஜெய்சங்கர் நடித்த முதல் படம் இதுதான். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சதுக்கும், அன்னை படத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கும் முக்கியமான காரணம் ஜெய்சங்கரின் நல்ல மனசுதான். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.

Next Story