Flash back: கடும் போதையில் வாலி... போலீஸில் மாட்ட சதி... கண்ணதாசனின் சூப்பர் ஐடியா!

கண்ணதாசனுக்குப் பிறகு வந்தவர் தான் வாலி. இருந்தாலும் அவருக்கே டஃப் கொடுக்கும் வகையில் சில பாடல்களை எழுதினார். அவற்றை எல்லாம் பார்க்கும்போது இது கண்ணதாசன்தான் எழுதி இருப்பாரோ என்றெல்லாம் சந்தேகம் வரும். அந்த வகையில் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா அனைத்து வகைப் பாடல்களையும் பல தலைமுறை நடிகர்களுக்கும் எழுதி புகழ்பெற்றவர் வாலி. இவரை திரையுலகில் வாலிபக்கவிஞர் என்றே செல்லமாக அழைப்பர்.
வாலியைப் பொருத்தவரை தன்னைவிட இளவயது பாடகர்கள் ஆனாலும் சரி. அவர்கள் எழுதியது பிடித்து இருந்தால் பாராட்டத் தயங்க மாட்டார். வாலி முதலில் போட்டி போட்டது கண்ணதாசனுடன்தான். ஒரு கட்டத்தில் கண்ணதாசனைக் காட்டிலும் வாலியே பாடல்கள் அதிகம் எழுதினார். அப்போது கண்ணதாசன் ஒரு பார்ட்டி வைத்தார்.
அதில் வாலியும் இணைந்தார். மதுஇ மாது என அந்தப் பார்ட்டி களை கட்டியது. ஒரே அறைக்குள் போதையோடு வாலி நுழைந்துள்ளார். அப்போது கண்ணதாசனிடம் அவரது உதவியாளர் 'இதுதான் சரியான நேரம். காவல்துறையில் சொன்னால் இந்த ஓட்டலுக்கு வந்து வாலியைக் கையோடு கைது செய்து விடுவார்கள். அவரது மார்க்கெட்டும் சரிந்து விடும்'என்று ஐடியா கொடுத்தார்.
கண்ணதாசனுக்கோ வந்ததே கோபம் 'அதெல்லாம் செய்வது துரோகம். அதை மட்டும் செய்யக்கூடாது. வாலி எப்போது இந்த அறையை விட்டு வெளியே வருகிறாரோ அதுவரை நீ காத்திருந்து அவரை காரில் அழைத்து வீட்டில் விட்டு விட்டு வா' என்று சொல்லிவிட்டு சென்றார்.
வாலியின் காதுகளிலும் இந்த சேதி விழுந்திருக்கிறது. கண்ணதாசன் சென்ற பிறகு வாலி அந்த உதவியாளரிடம் சென்றார். நான் தனது சமூகத்தைக் குறிப்பிட்டு நான் மீன் சாப்பிடுபவன். என்னை நீ நினைக்கும்படி வீழ்த்த முடியாது என்கிற ரீதியில் கத்தி விட்டு கண்ணதாசனை நினைத்து நெகிழ்ந்து போனாராம். வாலியே இந்தத் தகவலை தனது நினைவு நாடாக்கள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.