ரேட்டிங்காக வாழ்க்கையோட விளையாடுறதா? பிக்பாஸில் பத்திக்கிட்டு எரியும் சம்பவம் - நினைச்சத சாதிச்சிட்டாங்கே

Biggboss: தமிழ் மட்டுமில்லாமல் பிரதான மொழிகளிலும் பிக்பாஸ் என்ற பெயரில் ரியாலிட்டி ஷோக்களை நடத்தி சம்பந்தப்பட்ட நிறுவனம் பெரிய லாபம் பார்த்து வருகிறார்கள். மக்களுக்கு நன்கு பரீட்சையமான பிரபலங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அடைத்து நாள்தோறும் அவர்கள் என்ன செய்கிறார்கள்?

அவர்களுக்குள் எப்படிப்பட்ட கருத்துரையாடல் நடைபெறுகிறது? ஒரு கட்டத்தில் அந்த கருத்துரையாடலில் வாக்குவாதம் எழுந்து அதுவே பெரிய பிரச்சினைக்கு வழிவகுக்கிறது. இந்த பிரச்சினைதான் அந்த ஷோக்கிற்கு இருக்கும் ப்ளஸே. இப்படியெல்லாம் காண்பித்து ரசிகர்களை இழுப்பதே பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

இதையும் படிங்க: லியோ படத்தில் நீ இருப்பியாமா… அனுராதா மகன் ஆசையாக கேட்ட விஷயம்.. ஆனா கடைசியில் செம ட்விஸ்ட்டே..!

அதன் மூலம்தான் அதனுடைய டிஆர்பி உயரத்தொடங்கும். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பது தானாகவே நடக்கிறதா? அல்லது எழுதி கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டா என்றுதான் இதுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. இந்த நிலையில் தமிழில் கமல் பிக்பாஸை தொகுத்து வழங்குவது போல் கன்னடத்தில் நடிகர் சுதீப் கன்னட பிக்பாஸை தொகுத்து வழங்கிவருகிறார்.

இந்த கன்னட சீசனில் சந்தோஷ் என்ற போட்டியாளர் கலந்து கொண்டிருந்தார். அவர் ஒரு விவசாயி. எருது போட்டிகளில் விளையாடுவது, அதிகமாக தங்க நகைகளை அணிவதன் மூலம் கர்நாடகத்தில் பிரபலமாகியிருந்தார்.

இதையும் படிங்க: கண்ணதாசன் மீது சந்தேகப்பட்ட பந்துலு… ஆனா நடந்ததே வேற… பின்ன கவியரசர்னா சும்மாவா?…

கன்னட பிக்பாஸில் சமீபகாலமாக ரசிகர்களிடையே ஆர்வம் குறைந்து காணப்பட்டதால் அதன் டிஆர்பி குறைந்துவிட்டதாம். அதனால் விட்டதை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் அந்த போட்டியாளர் சந்தோஷ் அணிந்திருந்த புலிப்பல் டாலர் போட்ட செயினை மட்டும் க்ளோஸப்பில் காட்டியிருக்கின்றனர்.

அதை டிவியில் பார்த்ததும் சமூக ஆர்வலர்கள் சந்தோஷ் மீது புகார் அளித்துவிட்டனராம். மிருகவதை தடைச்சட்டத்தின் கீழ் அங்குள்ள போலீஸார் சந்தோஷ் மீது வழக்கு தொடர்ந்து நேராக பிக்பாஸ் வீட்டிற்குள்ளே சென்று அவரை கைது செய்து வந்திருக்கின்றனர்.

இது ஒரு குற்றமாக இருந்தாலும் டிஆர்பிக்காக இப்படியெல்லாம் பண்ணுவார்களா? என்றும் அங்குள்ள ரசிகர்கள் புலம்பிவருகின்றனர்.

இதையும் படிங்க: மடோனாவே நினைக்காத வேலையை படத்தில் லாக் செய்த லோகேஷ்… கடைசியில் விஜய் செய்த செயல்..!

 

Related Articles

Next Story