More
Categories: Cinema News latest news

அத வித்துதான் பொழப்பையே ஓட்டுனேன்.. கௌதம் கார்த்திக்கு இப்படி ஒரு நிலைமையா?..

தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் கௌதம் கார்த்திக். ஒரு பெரிய நடிகரின் வாரிசு என்றாலும் தனது சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் தன்னுடைய பங்கை சினிமாவிற்காக அர்ப்பணித்துக் கொண்டு வருகிறார்.

கௌதம் கார்த்திக் தந்தையான நடிகர் கார்த்திக் 80களில் எந்த அளவுக்கு கொடிகட்டி பறந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் அவரின் புகழில் பாதி சதவீதம் கூட இன்னும் கௌதம் கார்த்திக்கால் சினிமாவில் அடைய முடியவில்லை.

Advertising
Advertising

அவருடைய முதல் படமான கடல் திரைப்படம் மக்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்த கௌதம் கார்த்திக் மக்கள் மத்தியில் இன்னும் அந்த ஒரு சிறப்பான அந்தஸ்தை பெற முயற்சித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான பத்து தல படம் அவருடைய நடிப்பிற்கு ஒரு அடையாளமாக திகழ்ந்தது. அந்தப் படத்தில் அவருடைய நடிப்பை பெருமளவு அனைவரும் பேசினார்கள். நல்ல பாராட்டையும் பெற்றார் கௌதம் கார்த்திக். அதேபோல 1947 என்ற படமும் அவருடைய நடிப்பிற்கு ஒரு முக்கியமான அந்தஸ்தை பெற்று தந்தது.

இந்த இரு படங்களின் மூலம் கௌதம் கார்த்திக் மக்கள் நெஞ்சங்களில் ஓரளவு ஆழமாக பதிந்து விட்டார். இந்த நிலையில் இவர் ஒரு பேட்டியின் போது தெரிவித்த ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று வைரல் ஆகி வருகின்றது.

நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்ட கௌதம் கார்த்திக் அவர் எந்த நிலையில் தனக்கு உதவிகரமாக இருந்தார் என்பதை அந்த பேட்டியின் போது தெரிவித்துள்ளார். அதாவது கௌதம் கார்த்திக்கு யாரிடமும் கடன் வாங்குவது என்பது பிடிக்காதாம்.

சொந்த காலிலேயே நிற்க வேண்டும் என்ற மன உறுதி படைத்தவராம். தனது திருமணத்திற்கான செலவுகளை கூட அவர் செலவிலேயே தான் பார்த்தாராம். கொரோனா காலத்தில் எந்த ஒரு பட வாய்ப்புகளும் இல்லாத நிலையில் அவருடைய பைக் , கார் இவைகளை விற்றுத்தான் அவருடைய வாழ்க்கையை நடத்தினாராம். அந்த சமயத்திலும் அவருடன் கூட இருந்தவர் மஞ்சிமா மோகன் என்று தனது காதல் மனைவியை பற்றி அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க :வெட்கமா இருக்கு… நன்றியை மறந்தாரா?… அஜித் செயலால் கடுப்பான ரசிகர்கள்..

Published by
Rohini

Recent Posts