Cinema News
ஊட்டி குளிர்ல சின்ன ப்ரா தான் கொடுத்தாங்க…! கடுப்புல படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை…!
2001ஆம் ஆண்டு ஆர்.டி. நாராயணமூர்த்தி இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த படம் ‘மனதை திருடிவிட்டாய்’. இந்த படத்தில் நடிகை கௌசல்யா ஏற்கெனவே நடிக்க நடிகை காயத்திரி ஜெயராம் இந்த படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகமாகினார்.
இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்தப் படத்தில் மஞ்சக்காட்டு மைனா என்ற பாடல் பட்டிதொட்டி எல்லாம் பரவி மக்களை ரசிக்க வைத்தது. இந்த படத்திற்கு பிறகு இவரை பார்க்கும் போதெல்லாம் இந்த பாடலைத்தான் ஒளிபரப்பு செய்வார்கள். அந்த அளவிற்கு பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த பாடல் ஊட்டியில் படமாக்கப்பட்டதாம். பிரபு தேவாவுடன் ஜோடி சேர்ந்து காயத்திரி ஜெயராம் இந்த பாடலில் ஆடியிருப்பார். மேலும் இந்த பாடலுக்காக காயத்திரிக்கு ஒரு மேலாடை மட்டுமே கொடுத்திருப்பார்கள்.அதுவும் சிறிய ப்ராதான் கொடுத்திருப்பார்கள். அதை பார்த்ததும் காயத்திரிக்கு கடுப்பாகி விட்டதாம்.
ஏனெனில் ஊட்டியில் சரியான குளிராம். பிரபுதேவாவிற்கு ஜெர்கின் போன்ற ஆடையை கொடுக்க இவருக்கு மட்டும் ப்ராவை கொடுக்க அம்மணி காண்டாகி விட்டாராம். அந்த பாடல் படப்பிடிப்பில் இஷ்டம் இல்லாமல் தான் நடித்திருப்பேன் என்று கூறினார்.