ஜெமினிகணேசனிடம் தன் காதலை வெளிப்படுத்திய விதம்...! சாவித்திரியின் செயலை கண்டு வாயடைத்து நின்ற படக்குழு...

by Rohini |
gemini_main_cine
X

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்தவர்கள் பல பேர் உள்ளனர். இன்றளவும் அதன் ஆதிக்கம் இருந்து கொண்டே தான் இருக்கின்றன. அஜித்-ஷாலினி, சூர்யா- ஜோதிகா உட்பட பெரும்பாலான ஜோடிகள் காதலித்து கரம் பிடித்த ஜோடிகள். இந்த வழக்கம் இன்று மட்டும் இல்லை அந்த காலகட்டத்தில் இருந்தே தொடர்ந்திருக்கின்றன. அந்த வகையில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்களில் மிகவும் பிரபலமானவர்கள் நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் நடிகை சாவித்திரி.

gemini1_cine

இவர்களின் வாழ்க்கை வரலாறை நம் கண்முன்னே ஒரு திரைப்படமாக காட்டியிருக்கின்றனர். ஜெமினிகணேசனுக்கு ஏற்கெனவே திருமணமாகி இருந்தாலும் இந்த ஜோடியை தான் ஊரே கொண்டாடியது. அந்த அளவுக்கு அன்போடும் பாசத்தோடும் இருவரும் இருந்திருக்கின்றனர். ஜெமினிகணேசனுக்கு சாவித்திரியையும் சேர்த்து மொத்தம் 4 மனைவிகளாம். அதில் சாவித்திரி மூன்றாவது மனைவி. இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த முதல் படம் மனம் போல் மாங்கல்யம் திரைப்படம். அதன்பிறகு இருவரும் ஏகப்பட்ட திரைப்படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.

gemini2_cine

இவர்களின் ஜோடியை பார்த்து திரையுலகமே வியந்து பார்த்திருக்கிறதாம். அந்த அளவுக்கு இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் காதலை வெளிப்படுத்தி மிக மரியாதையாக நடந்து கொள்வார்களாம். ஒரு சமயம் மனம் போல் மாங்கல்யம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஜெமினி ஏற்கெனவே தான் தாமதாக வருவேன் என்று கூறியிருந்திருக்கிறார்.

gemini3_cine

அந்த படத்தின் இயக்குனர் அப்போ சாவித்திரி சம்பந்தமான காட்சிகளை மட்டும் முதலில் படமாக்கிவிடுவோம் என நினைத்து சாவித்திரியிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் சாவித்திரியோ ஜெமினியை பார்க்காமல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளமாட்டேன் என கூற சிறிது நேரத்தில் ஜெமினி படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்தாராம். அவரை பார்த்ததும் சாவித்திரி ஓடி போயி அவரை இறுக அணைத்துக் கொண்டு 10 நிமிடம் அவரை கட்டி அணைத்து அழுது விட்டாராம். இதை பார்த்த அந்த படக்குழு அவர்களின் காதலை பார்த்து ஆச்சரியப்பட்டனராம்.

Next Story