நான் பாத்ரூம்ல இருந்து எட்டிப் பார்த்தேனா? அவர் என்னெல்லாம் பண்ணாரு தெரியுமா? சிக்கலில் கோபிநயினார்

by Rohini |
gopi
X

gopi

அறம் படத்தின் இயக்குனரான கோபி நயினார் மீது போடப்பட்ட புகார் குறித்த பிரச்சினைகள் மிகவும் பூதாகரமாக கிளம்பியுள்ளது. இலங்கை தமிழ் பெண்ணிடம் 30 லட்சம் மோசடி செய்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. படம் பண்ணி தருவதாக கூறி அந்த பெண்ணை ஏமாற்றியதாக கமிஷனரிடம் அந்த இலங்கையின் தமிழ் பெண் மனு ஒன்றை கொடுத்தார். ஆனால் அந்தப் பெண்ணை தனக்கு தெரியாது என்றும் இதற்கு முன் அந்தப் பெண்ணை நான் பார்த்ததே இல்லை என்றும் கோபி நயினார் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

இந்த நிலையில் கோபி நயினாரின் உதவியாளரான ராஜ் கமலிடம் இருந்து சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அதாவது கோபி நயினாருடன் ராஜ் கமல் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக சேர்ந்து பணியாற்றியவர். ஆனால் இந்த மூன்று வருடங்களில் ஒரு தடவையாவது சம்பளம் என்ற ஒன்றை கோபி நயினார் கொடுத்ததே இல்லையாம்.

gopi1

gopi1

இந்த ராஜ் கமலை பற்றியே அந்த பேட்டியில் கோபி நயினார் தவறான விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதாவது ராஜ்கமல், படத்தில் பணியாற்றும் துணை நடிகைகளிடம் தவறாக நடந்து கொள்வார் என்றும் அவர்கள் பாத்ரூமை எட்டி பார்ப்பவர் என்றும் ராஜ்கமல் மீது கோபி நயினார் கூறியிருந்ததாக செய்திகள் வெளியானது.

இதைப் பற்றி ராஜ் கமலிடம் கேட்டபோது "அப்போ கோபி நயினார் பாத்ரூம் சுவரை கண்ணாடியாலா கட்டியிருக்கிறார்" என கிண்டலாக கேட்டார். மேலும் அவர் செய்யும் தவறை மறைப்பதற்காகவே இந்த மாதிரி தேவையில்லாத புகார்களை கொடுத்துக் கொண்டு வருகிறார் எனவும் ராஜ்கமல் கூறினார்.

என்னுடைய தங்கை திருமணத்திற்காக 80 ஆயிரம் ரூபாயை கையில் வைத்திருந்தேன். இன்னும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. அதைப்பற்றி கோபிநயினாரிடம் கூறியிருக்கிறேன். அது தெரிந்தும் அவருக்கும் அவர் மகன்களுக்கும் டிரஸ் எடுப்பதற்கான செலவை என் தலையில் கட்டி விட்டார். அந்தத் தொகையை நான் வைத்திருந்த 80 ஆயிரம் ரூபாயிலிருந்து தான் கொடுத்தேன்.

gopi2

gopi2

மேலும் கறி, மீன் என வாங்கி வரச் சொல்லி கிலோ கணக்கில் அவருக்கு தெரிந்தவர்கள் பக்கத்தில் இருப்பவர்கள் என கொடுக்க சொல்லுவார். அதுவும் என் சொந்த பணத்திலிருந்து தான் நான் செய்திருக்கிறேன். தானமாக வழங்க வேண்டும் என்றால் அவர் பணத்தில் இருந்து தானே கொடுக்க வேண்டும். எதற்கு என் காசில் இருந்து செய்கிறார் என்று மிகவும் ஆதங்கமாக பேசினார் ராஜ்கமல்.

மேலும் என்னை மாதிரி ஜெய் என்ற மற்றொரு உதவியாளர் இருக்கிறார். அவரிடம் கேட்டுப் பாருங்கள். இன்னும் தெரியாத விஷயங்கள் நிறைய தெரிய வரும் என்றும் ஒரு டிஸ்டை வைத்தார். மேலும் அறம் படத்தை கோபி நயினார் தானே எடுத்தார் என்று நினைக்கிறீர்கள். ஆனால் அவர் எடுக்கவில்லை என்ற திடுக்கிடும் தகவலை கூறினார் ராஜ்கமல்.

gopi3

gopi3

முதல் படம் , சினிமாவில் அறிமுகமாகும் கோபி நயனாருக்கு கிராபிக்ஸ் பற்றி தெரியாது. எடிட்டிங் பற்றி எதுவுமே தெரியாது . இப்படி இருக்கும்போது எப்படி அவரால் படம் எடுக்க முடிந்தது. எடிட்டர் உதவியாளர்களை வைத்து தான் படம் எடுத்தாரே தவிர முழுவதுமாக அவர் எடுக்கவில்லை. மேலும் கதை சொல்லும் திறமை மட்டுமே அவரிடம் இருக்கின்றது என்றும் ராஜ் கமல் கூறினார்.

இதையும் படிங்க : அர்ஜூனின் மகள் காதலிப்பது இந்தப் பிரபலத்தின் மகனையா? விரைவில் டும் டும் டும் தான்..

Next Story