Gossip: வைரல் ஒரெழுத்து நடிகரின் வாழ்க்கையை காலி செய்தது திடீர் தளபதியா?

Gossip
Gossip: தமிழ் சினிமாவில் இரண்டு படங்களிலேயே ஹிட் கொடுத்தவர் ஒற்றை எழுத்து நடிகர். இவருடைய திடீர் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஆனால் அவரின் இந்த நிலைக்கு திரையுலகமே காரணம் என தொடர்ந்து அதிர்ச்சி தகவல் கசிந்து வருகிறது.
தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நடிகர்களை இயக்கி கொண்டு இருக்கும் அந்த மாஸ் இயக்குனரின் முதல் படம் நாயகன் தான் இந்த ஒற்றை எழுத்து நடிகர். அவரின் நடிப்பு பலரை அசத்த தொடர்ந்து இவருக்கு வாய்ப்பும் குவிந்தது.
ஆனாலும் நடிகர் தொடர்ச்சியாக எல்லா படத்தையும் ஓகே செய்யாமல் தனக்கு பிடித்த படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அப்படங்களுமே சூப்பர்ஹிட் வெற்றி படங்களாகவே அமைந்தது. கடந்த ஆண்டு காதல் படம் ஒன்றிலும் நடித்து முடித்தார்.
அப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் இவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது யாருக்கும் தெரியாமல் தனியாக இருக்கும் ஒற்றை எழுத்து நடிகர் கலரிங் செய்துக்கொண்டு ஆபாஷ கேப்ஷன்களால் அதிர வைத்தார்.
அவருடைய நெருங்கிய வட்டாரத்தினர் அவரை தேடும் பணியில் இருக்கின்றனர். அவர் நடித்த படங்களுக்கு இன்னும் சம்பளம் வராமல் இருப்பதும் அவருடைய தற்போதைய நிலைக்கு காரணமாக கூறப்பட்டது. அவரின் நெருங்கிய தோழி அவருக்கு மன உளைச்சலால் நிறைய பிரச்னை ஏற்பட்டு இருப்பதாக கூறினார்.
தமிழ் சினிமாவின் சன் நடிகரும், அவருடைய தம்பி நடிகரும் இவர் சொல்லும் கதைகளுக்கு இன்னொரு நடிகரை தேர்வு செய்து இவருக்கு நிறைய அசிங்கம் கொடுத்து இருக்கிறார்களாம். அதுவும் இவரின் மன உளைச்சலை அதிகப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் இவர் வந்த அதே டிவியில் இருந்து வந்து தற்போது தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருக்கும் அப்பா மகன் பெயர் கொண்ட நடிகர் சமீபத்தில் திடீர் தளபதியாகவும் மாறினார். அவரின் காலேஜ் ரவுடி படத்தில் இந்த ஒற்றை எழுத்து நடிகரையும் சேர்த்து இருக்கின்றனர்.
ஆனால் அப்போது இவருக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அவரை படத்தில் நடிக்க வைக்க கூடாது என திடீர் தளபதி கண்டிஷனும் போட்டு இருக்கிறார். அதுவும் இவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணமாக அமைந்ததாம்.