அஜித் சொன்ன அந்த வார்த்தை! அதான் தல.. கௌதம் வாசுதேவ் மேனன் பெருமிதம்

Ajith: கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் என்னை அறிந்தால். அந்தப் படம் அஜித்திற்கு ஒரு மாபெரும் வெற்றியை பெற்று கொடுத்தது. அதே சமயம் கௌதம் மேனனுக்கும் ஒரு மறுவாழ்வு அளித்த படமாகவும் என்னை அறிந்தால் திரைப்படம் அமைந்தது. அதுவரை ஏகப்பட்ட கடனில் சிக்கி இருந்த கௌதம் மேனன் அந்த படத்திற்குப் பிறகு மீண்டும் இந்த சினிமாவில் தலை நிமிர வைத்த படமாக என்னை அறிந்தால் திரைப்படம் அமைந்தது.

இந்த நிலையில் படத்தைப் பற்றியும் அஜித்தை பற்றியும் ஒரு பேட்டியில் கூறிய கௌதம் மேனனின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. வேட்டையாடு விளையாடு மாதிரி ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என அஜித் கௌதம்மேனனிடம் கூறினாராம். அதன் காரணமாகவே தான் என்னை அறிந்தால் திரைப்படம் உருவானது என கௌதமேனன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: தளபதியையே கதறவிட்டாரு… இவரு நமக்கு வேண்டாம்.. யுவனை கழட்டிவிட்ட படக்குழு!…

அது மட்டும் அல்ல .அந்த படத்தில் சில காட்சிகளில் நிறைய வசனங்கள் கெளதம் மேனன் வைத்திருந்தாராம். அதுவும் அஜித்தை பெரிய அளவில் மாஸாக காட்டுவதற்கு உரிய வசனங்களாம். அதையெல்லாம் பார்த்து அஜித் இந்த டயலாக் எதற்கு என கேட்பாராம். அதற்கு கௌதம் ‘நீங்கள் பேசும் போது தியேட்டரில் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுக்க வேண்டும் .மாஸாக இருக்க வேண்டும் என்பதற்காக’ என்று கூறுவாராம்.

அதற்கு அஜித் இதே டயலாக்கை மற்ற ஹீரோக்கள் நடித்திருந்தால் வைத்திருப்பீர்களா என கேட்டாராம். அதற்கு கௌதம் இல்லை உங்களுக்காக தான் வைத்திருக்கிறேன் என கூறுவாராம். உடனே அஜித் இந்த டயலாக் எதுவுமே தேவையில்லை. சாதாரணமாகவே இருந்தால் போதும் என்று கூறுவாராம். அது மட்டுமல்ல. கௌதம் மேனன் அவருடைய முதல் படத்திலிருந்து அஜித்தை மனதில் வைத்து தான் எழுதி இருக்கிறாராம்.

இதையும் படிங்க: கமல் மீது விஜய்சேதுபதிக்கு காண்டா? இதெல்லாம் இப்போ தேவையா?

எல்லா படங்களிலும் அஜித் நடித்தால் எப்படி இருக்கும் என்றுதான் யோசிப்பாராம் கௌதம் மேனன். அதனால் தான் ஒரு ஃபேன் பாயாக என்னை அறிந்தால் திரைப்படத்தை அஜித்திற்காக உருவாக்கினேன் என கூறியிருந்தார். காக்க காக்க திரைப்படம் கூட முதலில் அஜித்துக்காக தான் எழுதப்பட்டது.

அதன் பிறகு தான் சூர்யா உள்ளே வந்தார் என்று கூறியிருக்கிறார் கௌதம் மேனன். அஜித் மேல் எப்பொழுதுமே எனக்கு ஒரு தனி அன்பும் மரியாதையும் இன்றுவரை இருந்து கொண்டு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.. திரைப்படங்களை இயக்குவதை விட்டு இப்போது படத்தில் நடிக்கவும் ஆரம்பித்து இருக்கிறார் கௌதம் மேனன்.

இதையும் படிங்க: விஜய் பார்க்கும் ‘வி’ சென்டிமென்ட்… அப்படிப் பார்த்தா அது எப்படி செட்டாகும்?

கூடிய சீக்கிரம் அஜித்துடனும் சேர்ந்து படத்தில் நடிப்பாரா என எதிர்பார்க்கப்படுகிறது .தற்போது அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கல் அன்று ரிலீஸ் என சொல்லப்படுகிறது. அதனை அடுத்து எந்த இயக்குனருடன் அவர் கூட்டணி சேரப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it