ஜிவி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்தில் விஜய், ரஹ்மான் தலையிட்டது உண்மையா? உண்மையை உடைக்கும் பிரபலம்!

GV Prakash-Saindhavi: நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவருக்கும் இடையேயான விவாகரத்து நிகழ்வு பெரிய அளவில் வைரலாக பரவி இருக்கும் நிலையில், இவர்கள் இந்த முடிவுக்கு பெரிய பிரபலங்கள் சமாதானம் பேசியதாக கூறப்படும் நிலையில் சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

12 ஆண்டுகளாக பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்தவர்கள் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதி. ஆனால் ஜிவி பிரகாஷ் நடிகரான பிறகு இருவருக்கும் இடையில் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதை தொடர்ந்து இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கை முடித்து கொள்வதாக அறிவித்து இருக்கின்றனர்.

இதையும் படிங்க: அந்த விஷயத்துல எம்.ஜி.ஆரும் சிவாஜியும் வேற வேற!.. சீக்ரெட் சொல்லும் நாகேஷ்…

ஜிவி பிரகாஷின் தாயின் தம்பி தான் ஏ.ஆர்.ரஹ்மான். தாய் மாமனாக அவர் இந்த பிரச்னையில் சமரசம் செய்ததாக கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜய் கூட இந்த பிரச்னையில் தலையிட்டதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து திரை விமர்சகர் அந்தணன் தெரிவித்து இருக்கிறார்.

அப்பேட்டியில் இருந்து, தாய்மாமன் - மருமகன் என்ற உறவு பலமாக இருவருக்குமே இருந்தது இல்லை. அவ்வளவு ஏன் இருவருக்கும் பெரிய அளவில் உறவும் இருக்கவில்லை. உச்சத்தில் இருந்த ஏ.ஆர்.ரஹ்மானிடம் வாய்ப்பு கேட்காமல் ஜிவி பிரகாஷ் தன்னுடைய சினிமா கேரியரை தனியாக தான் தொடங்கினார். அதன்பின்னர் தான் ரஹ்மானிடம் அவருக்கு வாய்ப்பே கிடைத்தது.

இதையும் படிங்க: அந்த விஷயத்துல எம்.ஜி.ஆரும் சிவாஜியும் வேற வேற!.. சீக்ரெட் சொல்லும் நாகேஷ்…

ஜிவி பிரகாஷ் தனியாக இருக்கிறார். அவர் அம்மாக்கூட இந்த விஷயத்தில் தலையிடவில்லை என்பது தான் உண்மை. இதுமட்டுமல்லாமல், விஜய் இந்த விஷயத்தில் தலையிட்டார் என்பதையும் ஏத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் என்ன தான் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் குடும்ப விஷயத்தில் தலையிட மாட்டார்கள். அது தான் உண்மை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

 

Related Articles

Next Story