வேர்ல்டு லெவல் டிரெண்ட் ஆன மல்லிப்பூ பாடல்.. ரஹ்மான் இல்லைன்னா அவ்வளவுதான்.. சீக்ரெட்டை உடைத்த கௌதம்..

Published on: September 20, 2022
---Advertisement---

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் கடந்த 15 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இத்திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார் சிம்புவின் தாயாராக நடித்திருக்கிறார்.

இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் வேற லெவலில் ஹிட் ஆனது. குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “மல்லிப்பூ” பாடல் உலக அளவில் ரீச் ஆனது. இணையத்தில் இப்பாடலை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் இத்திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் பேசிய கௌதம் மேனன் “மல்லிப்பூ பாடல் இப்போது வேற லெவலில் ஹிட் ஆகி இருக்கிறது. ஆனால் இத்திரைப்படத்தில் அந்த பாடலுக்கான இடமே முதலில் எழுதப்படவில்லை. படத்தில் அந்த நபர் வீடியோ கால் பேசுவது போல் தான் எழுதியிருந்தோம்.

ரஹ்மான் என்னை அழைத்து, இதனை ஒரு பாடலாக உருவாக்கலாம் என்றார். அதற்கு தனியாக காட்சியையும் எழுதிகொண்டு வரச்சொன்னார். அவரால் தான் இப்பாடல் உருவானது. அப்பாடல் ஹிட் ஆனதற்கு முழு காரணமும் ரஹ்மான் தான்” என கூறியுள்ளார். “மல்லிப்பூ” பாடலை கவிஞர் தாமரை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.