அப்போ தேவைப்படல! இப்போ மட்டும் தேவைப்படுதா? பயில்வானின் கேள்வியால் பயங்கர அப்செட்டில் ஹன்சிகா

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா. மாப்பிள்ளை என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதற்கு முன்னதாகவே குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார் ஹன்சிகா. முதன் முதலில் ஹீரோயின் ஆக அவர் சேர்ந்து நடித்த நடிகர் கிருத்திக் ரோஷன்.

வந்த வேகத்தில் ரசிகர்களை கவர்ந்த ஹன்சிகா

அதன் பிறகு தான் தமிழில் மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானார். பார்ப்பதற்கு கொழுக் மொழுக் நடிகையாக இருந்ததனால் ரசிகர்களை மிக எளிதாக கவர்ந்தார். அதுவும் ஒரு சாயலில் குஷ்புவை போல இருந்ததனால் ரசிகர்களிடம் எளிதாக நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி, எங்கேயும் காதல் போன்ற பல படங்களில் நடித்து வந்தார் ஹன்சிகா.

இதையும் படிங்க : போற போக்குல வாய்ப்பு கிடைக்கும் போல..கல்யாணத்துக்கு வந்த பொண்ணுக்கு எம்.ஜி.ஆர் படத்தில் கிடைத்த வாய்ப்பு!..

han1

han1

அதன் பிறகு விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த அம்மணிக்கு திடீரென்று வாய்ப்புகள் குறைய தொடங்கின. அதனைத் தொடர்ந்து தான் பிரபல தொழிலதிபரான சோஹையில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் கோலிவுட் பக்கம் தலை காட்டி இருக்கிறார் ஹன்சிகா.

மீண்டும் கோலிவுட் பக்கம்

நடிகர் ஆதியுடன் இணைந்து பார்ட்னர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பிரமோஷனுக்காக நேற்று சென்னையில் பத்திரிக்கையாளர் பேட்டியில் கலந்து கொண்டு பேசினார் ஹன்சிகா. அப்போது பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதனும் அந்த ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க : கமல் படத்துக்கு செம மேட்டரை கையிலெடுக்கும் ஹெச்.வினோத்!.. அட இதுவரை யாரும் தொடலயே!..

அப்போது ஹன்சிகாவிடம் பயில்வான் ரங்கநாதன் "வாய்ப்புகள் குறைந்ததனால் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு போனீர்கள். ஆனால் அந்த திருமணத்திற்கு தமிழ் சினிமாவில் இருந்து எந்த ஒரு பத்திரிக்கையாளருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. யாரையும் மதிக்கவில்லை. இப்ப மட்டும் எங்களுடைய தயவு தேவைப்படுகிறதா? உங்களுடைய கல்யாணத்திற்கு வெளிச்சம் போடவில்லை. ஆனால் இப்போ நடிக்க வரும்போது மட்டும் வெளிச்சம் போடணுமா?" என்று கேட்டாராம்.

han2

han2

ஒரு தடவை, ரெண்டு தடவ இல்ல

இதைப் பற்றி பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறும்போது "இந்த ஒரு கேள்வியை என்னால் மட்டுமே கேட்க முடியும் என்றும் இதை இந்த முறை மட்டும் நான் கேட்டதில்லை. ஏற்கனவே ரேவதி இடமும் இதே கேள்வியை நான் கேட்டிருக்கிறேன் என்றும் ஆனால் ரேவதி அதற்கு பதில் அளிக்காமல் மேடையில் இருந்து எழுந்து சென்று விட்டார் என்றும் ஹன்சிகாவிற்கு தமிழ் தெரியாததனால் நான் கேட்ட கேள்விக்கு பொருள் தெரியாமல் விழிப் பிதுங்கி நின்றார் "என்றும் பயில்வான் ரங்கநாதன் கூறினார்.

இதையும் படிங்க : என்ன நட்டுக்கிட்டு நிக்குமா?..தொகுப்பாளரிடம் கலாய் வாங்கிய இயக்குனர்!. இது என்னடா சின்ன தலக்கி வந்த கொடுமை..

 

Related Articles

Next Story