More
Categories: Cinema News latest news

வெள்ளத்தில் தவிக்கும் மக்கள்!.. கண்டுக்கொள்ளாமல் ஷூட்டிங் போகும் பெரிய நடிகர்கள்.. ஹரிஷ் கல்யாண் பளிச்!

மிக்ஜாம் புயல் சென்னையை பலமாக தாக்கிய நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் யாருமே மக்களுக்காக இறங்கி வந்து எந்தவொரு நிவாரண உதவியையும் செய்யவில்லை என குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.

இந்நிலையில், நடிகர்கள் சூர்யா, கார்த்தியை தொடர்ந்து முதல்வர் நிவாரண நிதிக்காக ஒரு லட்சம் ரூபாயை கொடுத்த பார்க்கிங் பட ஹீரோ ஹரிஷ் கல்யாணிடம் பெரிய நடிகர்கள் ஏன் யாரும் சென்னை மக்கள் வெள்ளத்தில் பாதித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு உதவாமல் உள்ளார்கள் என்கிற கேள்வியை பத்திரிகையாளர்கள் முன் வைத்த நிலையில், அதற்கு பளிச்சென பதில் அளித்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.

Advertising
Advertising

இதையும் படிங்க: A சர்டிபிகேட்தான் இப்போ டிரெண்டே!.. அனிமலை தொடர்ந்து பிரபாஸ் படத்துக்கும் அதேதானாம்!..

அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் திரைப்படம் மழை வெள்ளம் காரணமாக வசூல் ரீதியாக பாதிப்பை சந்தித்தாலும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த வாரம் மக்கள் தியேட்டருக்கு செல்ல முடியாத நிலையில், இந்த வாரம் மீண்டும் மக்களை தியேட்டர் பக்கம் நோக்கி நகர்த்த ப்ரோமோஷன் முயற்சியில் களமிறங்கி உள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஹரிஷ் கல்யாணிடம் செய்தியாளர்கள் நீங்க என்ன உதவி செஞ்சீங்க என கேள்வி எழுப்பினர்.

இதையும் படிங்க: 10 நிமிஷ சீனுக்கா இத்தனை செலவு… வெங்கட் பிரபு பலே ஆளு தாங்க.. தளபதி68 சுவாரஸ்யம்..!

அதற்குபதிலளித்த ஹரிஷ் கல்யாண், தன்னுடைய ரசிகர் மன்றம் சார்பாக உதவி செய்து வருவதாகவும், முதல்வர் நிவாரண நிதிக்கு தான் ஒரு லட்சம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பார்க்கிங் பட தயாரிப்பாளர் 2 லட்சம் ரூபாயை அளித்துள்ளதாகவும் கூறினார்.

பெரிய நடிகர்கள் உதவ முன் வராதது குறித்த கேள்விக்கு, அப்படியெல்லாம் இல்லை சில நடிகர்கள் உதவிக் கொண்டு தான் இருக்கின்றனர். இன்னும் பல நடிகர்கள் உதவ முன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Published by
Saranya M

Recent Posts