More
Categories: Cinema News latest news

மோசடியில் சிக்கிய கிரண்.?! பணம் கட்டி ஏமாந்துபோன ரசிகர்கள்… முழு விவரம் இதோ…

கடந்த 2001ஆம் ஆண்டு விக்ரமுக்கு ஜோடியாக ‘ஜெமினி’ படத்தில் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட், அஜித்துடன் ‘வில்லன்’ படத்திலும் கமல்ஹாசனுடன் ‘அன்பே சிவம்’ படத்தில் நடித்து பிரபமான இவர் பிரசாந்த், விஜயகாந்த் என டாப் ஹீரோக்களின் ஜோடியாக நடித்துள்ளார்.

Advertising
Advertising

சமீபத்தில், ஆம்பள, முத்தின கத்திரிக்கா ஆகிய படங்களில் துணை வேடத்தில் நடித்த நடிகை கிரண், திரைப்படங்களில் இருந்து விலகியிருந்தாலும்,  தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், கிரண் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் கவர்ச்சியான புகைபடங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

தற்போது, இவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில், கவர்ச்சியை கையில் எடுத்துக்கொண்டு அதனை தனி பிஸினஸாக மாற்றினார். அதன்படி, கிரணின் இணையதளம் மற்றும் ஆப் பற்றி சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று ஆன்லைனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்களேன் – பிரியா ‘அந்த’ விஷயத்தில் ரெம்ப வீக்… உண்மையை உளறிய அருண் விஜய்.!

அந்த வகையில், இந்த கிரண் ஆப் மற்றும் இணையதளத்தில் உள்ள சர்ச்சைக்குரிய விஷயம் என்னவென்றால், கிரணின் இணையதளத்திற்குள் நுழைவதற்கு ரூ.49 செலுத்தி உள்ளே வரவேண்டுமாம். அடுத்ததாக கிரணை நேரில் சந்தித்து பேசுவதற்ககு ரூ.1.5 லட்சம், கிரணுடன் 10 நிமிட வீடியோ கால் பேச ரூ.15 ஆயிரம் என அவரது கவர்ச்சி புகைப்படத்தை பெறுவதற்கு தனி தனியே கட்டணம் செலுத்த கொடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், ரசிகர்கள் இதனை கவனித்து அந்த இணையத்தில் நுழைவதற்கு கட்டணம் செலுத்தி அவரது புகைப்படம் பெறுவதற்கும் அவருடன் வீடியோ கால் பேசுவதற்கும் அதற்கான பணத்தை செலுத்தி அவருடன் பேச முயன்றுள்ளனர்.

அந்த வகையில், தான் ஒரு ரசிகர் இவருடன் வீடியோ கால் பேசுவதற்கு ரூ. 25 ஆயிரம் என்ற கட்டணத்தை செலுத்தியுள்ளார். ஆனால், இவர் கால் செய்ததும் “ஹலோ” என்று குரல் மட்டும் கேட்டதாகவும் அது பின் அந்த அழைப்பு கட் ஆகியதாகவும் கூறபடுகிறது. இதனால், இந்த இணையதளத்தை முடக்கவும், கிரணின் இன்ஸ்டகிராமை முடக்கவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், இந்த மாதிரி மோசடியில் ஈடுபட்ட கிரண் மீது நடவடிக்கை எடுக்கவும் கூறுகின்றனர்.

Published by
Manikandan

Recent Posts