sathyaraj-vijayakanth-sarathkumr

தமிழ் திடையுலகில் இன்று முதல் இன்று வரை முன்னணி நடிகர்கள் பல்ர் நடிப்பதுமட்டுமின்றி சில படங்களை இயக்கவும் செய்துள்ளனர். எம்.ஜி.ஆர் சந்திரபாபு இதற்கு உதாரணம். அதற்கு அடுத்தகால கட்டங்களில் கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் சரத்குமார் இயக்குனர்களாக அவதாரம் எடுத்தனர். இதில் கமல்ஹாசனி தவிர்த்து மற்ற நடிகர்களில் படங்கள் மற்றும் அதன் வெற்றி தோல்வி குறித்து இங்கு காண்போம்.

விஜயகாந்த்:

தமிழ் சினிமாவின் ‘கேப்டன்’ என்று அழைக்கப்படும் விஜயகாந்த், நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருந்தாலும், தனது திரையுலகப் பயணத்தின் பிற்பகுதியில் ‘விருதகிரி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

படத்தின் பின்னணி மற்றும் கதைக்களம்:

2010-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் கதையாகும். இதில் விஜயகாந்த் ‘விருதகிரி’ என்ற நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைக் காப்பாற்றும் ஒரு சர்வதேசக் கடத்தல் கும்பலுக்கு எதிரான போராட்டமே இப்படத்தின் மையக்கரு. இந்த படத்தில் சண்டைகாட்சிகள் பிரமாண்டமாக எடுத்திருந்தார். பல காட்சிகள் வெளி நாடுகளில் எடுக்கப்பட்டன. பரபரப்பான திரைக்கதை இப்படத்திற்கு கூடுதல் பல சேர்ந்தது. விருதகிரி ஓரளவிற்கு வெற்றியும் பெற்றது. இந்த படமே விஜயகாந்த் ஹீரோவாக நடித்த கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மன்சூர் அலிகான்னா அடிப்பீங்க!.. நயினார் நாகேந்திரன்னா பயமா?.. திரிஷா மௌனம் ஏன்?…

சத்யராஜ்:

வில்லனாகத் தொடங்கி கதாநாயகனாக உயர்ந்து, பின் குணச்சித்திர நடிகராகப் கலக்கிகொண்டிருக்கும் சத்யராஜ், தான் உச்சத்தில் இருந்த காலத்தில் இயக்கிய ஒரே திரைப்படம் வில்லாதி வில்லன்.

படத்தின் பின்னணி மற்றும் கதைக்களம்:

1995-ம் ஆண்டு வெளியான இப்படம் சத்யராஜின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல். இதில் அவர் மூன்று விதமான வேடங்களில் நடித்திருப்பார். ஒரு ஊழல்வாதி அரசியல்வாதிக்கும், அவருக்கு எதிராகப் போராடும் இளைஞனுக்கும் இடையிலான மோதலை நகைச்சுவை கலந்த ஆக்ஷனாக அவர் இயக்கியிருந்தார்.
இயக்குநராக இருந்துகொண்டே மூன்று சவாலான கதாபாத்திரங்களைச் கையாண்டது சத்யராஜின் திறமைக்குச் ஒரு சான்று.
வழக்கமான கவுண்டமணியுடன் இணைந்து தனது ‘லொள்ளு’ பாணி நகைச்சுவையைத் திரைக்கதையில் அழகாக பயன்படுத்தியிருந்தார். நக்மாவின் கவர்ச்சி மர்றும் வித்யாசாகரின் பாடல்கள் என அனைத்தும் படத்தின் வணிக ரீதியான வெற்றிக்கு கை கொடுத்தது.

இதையும் படிங்க: இது இருந்தால் எதுவும் தேவையில்லை… விக்னேஷ் சிவன் சொன்ன காதலர் தின வாழ்த்து..

சரத்குமார்:

ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த சரத்குமார், தனது 100-வது திரைப்படமான ‘தலைமகன்’ மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

படத்தின் பின்னணி மற்றும் கதைக்களம்:

2006-ம் ஆண்டு வெளியான இப்படம் ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளரின் போராட்டத்தை மையமாக கொண்ட கதை களம். நிலத்தடி நீர் சுரண்டல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற முக்கியமான சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து இபடத்தின் கதையை வைத்திருந்தார். இப்படத்திற்குப் பால் ஜேக்கப் இசையமைத்திருந்தார். ஒரு நடிகராகத் தான் விரும்பிய வேகத்தைத் திரைக்கதையில் கொண்டு வர சரத்குமார் முயன்றார். ஆனாலும் படம் தோல்வியையே சந்தித்தது.