Connect with us

Cinema News

கமலை வளர்க்கவே கல்யாணம் செஞ்சிக்கிட்டேன்… அண்ணா இல்ல அப்பா.. கெத்தாக சொன்ன சாருஹாசன்!…

Charuhassan: நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய அண்ணன் சாருஹாசன் எப்போதுமே அப்பா என பல இடங்களில் சொல்லி இருப்பார். அதை உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய மனைவியுடன் அவர் கொடுத்து இருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், கமல்ஹாசனின் அண்ணனும் நடிகருமான சாருஹாசனுக்கு 93 வயதாகிறது. அவரது மனைவி கோமளவள்ளிக்கு 89 வயதாகிறது. 1954 செப்டம்பரில் தான் எங்களுக்கு கல்யாணம் ஆனது. அதன் பின்னர் தான் கமல்ஹாசன் பிறந்தான். அம்மாக்கு குழந்தை பிறக்க போகுது தான் எங்கள் கல்யாணம் நடந்தது.

இதையும் படிங்க: திடீரென நடந்த விபத்து!.. அதையும் தாண்டி சாதித்து காட்டிய ஜனகராஜ்!.. எல்லாமே ஹிட்டு!…

இல்லையென்றால் நான் ஓடிருப்பேன். எனக்கு கல்யாணம் செய்யும் ஆசையே இல்லை. அம்மா மாசமா இருந்ததால் அவசரமா சொல்லி தான் பண்ணினேன். கமலால் தான் கல்யாணம் ஆனது என்றார். அவர் மனைவி, என்னுடைய கணவர் தம்பி சந்திரஹாசன் தான் என்னுடைய நல்ல நண்பர்.

அவர் தான் என் குழந்தைகளை வளர்த்தார். அவ்வளவு நல்ல மனிதர். இப்போ என் குழந்தைகள் மரியாதையாக இருப்பதற்கு அவர்தான் காரணம் என்றார். நான் பாரீஸில் விழுந்துவிட்டேன். எனக்கு கமல் கால் செய்து என்ன அண்ணா என்னுடன் போட்டி போடுறீயா? எனக் கலாய்த்தான். அத்தனை முறை விழுந்து இருக்கேன்.  

இதையும் படிங்க: எல்லா படத்திலையும் செஞ்சாச்சு… இதுலையா மிஸ் பண்ணுவாரு.. விஜயின் பக்கா ப்ளான்!.

என்னை சுஹாசினி தான் சென்னைக்கு ஸ்டெக்சரில் அழைத்து வந்தாள். அவளால் தான் நான் மீண்டேன். எனக்கு திருமணத்தில் இப்போதும் நாட்டம் இல்லை. கமலுக்கு நான் தான் அம்மாவாக இருந்தேன். 5 வயசு வரை அவனுக்கு தெரியாது. என் மாமியாரும் அவன் அப்படியே நினைக்கட்டும் என்றார்.

ஆனால் வேலை செய்பவர்கள் உண்மையை அவனிடம் சொல்லிவிட்டனர். ஒருநாள் முழுவதும் அழுதுக்கொண்டே இருந்தான். என் திருமணம் முடிந்து நான்கு வயசு வரை அவனுக்கு நான் தான் எல்லாம் செய்ததால் என்னையே அம்மாவாக நினைத்து வளர்ந்தான். என் பிள்ளைகளை அவன் தங்கையாக தான் நினைக்கிறான் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். 

google news
Continue Reading

More in Cinema News

To Top