Ajithkumar: என் முடிவு தவறாகிவிட்டது… பல நேரங்களில் ஷாலினி இப்படித்தான்… விமர்சனங்களுக்கு அஜித் பதிலடி!

Ajithkumar: மனைவி ஷாலினி குறித்த நடிகர் அஜித் பேசி இருக்கும் விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக தமிழ் சினிமாவில் எல்லா நடிகர்களும் தங்களுடைய திரைப்படங்களுக்கு பிரமோஷன் செய்வதும், ரசிகர்களுக்கு அவ்வப்போதும் மீட்டிங் வைப்பதும் என தொடர்ந்து மீடியா வெளிச்சத்தில் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்.
இந்த விஷயத்திற்கு ரொம்பவே அப்பாற்பட்டவர் நடிகர் அஜித்குமார். ஒரு கட்டத்தில் தன்னுடைய ரசிகர் மன்றத்தை மொத்தமாக கலைத்தார். அதைத்தொடர்ந்து தன்னை தல என்றும் அல்டிமேட் ஸ்டார் என்றும் யாரும் அழைக்கக்கூடாது என அறிக்கை வெளியிட்டார்.
இதனால் ரசிகர்கள் அவருடைய திரைப்படத்தின் அப்டேட்டுக்கு பல நாள் தவம் இருந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தன்னுடைய படத்தை முடித்துக் கொண்டு அது குறித்து எந்த கவலையும் இல்லாமல் தன்னுடைய அடுத்த வேலைக்கு தாவி விடுவது அவரின் பழக்கம்.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே நடிகர் அஜித் குமாரை நிறைய முறை பொது இடங்களில் பார்க்க முடிகிறது. சமீபத்தில் துபாயில் நடந்த அவருடைய ரேஸ் சமயத்தில் நிறைய பேட்டிகளை ரசிகர்களுக்கு கொடுத்து ஆச்சரியப்படுத்தி வந்தார்.
அந்த நேரத்தில் திடீரென அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விருது விழா நடந்து முடிந்து இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஆங்கில மொழி பத்திரிகைகளுக்கு நடிகர் அஜித் பேட்டி கொடுத்து வருகிறார்.
அந்த பேட்டியில் தன்னுடைய மனைவி குறித்து கூறும்போது, திருமணத்திற்கு முன்னர் ஷாலினியும் மிகப் பிரபலமானவர்தான். நிறைய ரசிகர்கள் இருந்தனர். ஆனால் என்னை திருமணம் செய்து கொண்டவுடன் அவர் தன்னுடைய நடிப்பிலிருந்து விலகினார்.
பல நேரங்களில் என்னுடைய முடிவுகள் தவறாக மாறி இருக்கிறது. அப்பொழுது எல்லாம் அவர் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து உறுதுணையாக இருந்தார். இன்று நான் வாங்கும் எல்லா பாராட்டுகளுக்கும் அவர்தான் சொந்தக்காரர் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்த ஷாலினிக்கு அப்போதே ரசிகர்கள் ஏராளம். பின்னர் ஹீரோயினாக அறிமுகமாகி சில படங்கள் நடித்த நிலையில் அஜித்தை காதலித்து திருமணம் செய்துக்கொண்டதால் நடிப்பில் இருந்து விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.