சுகன்யா செஞ்சதை யாரும் செய்ய முடியாது! சைடு ஆக்டர் கூட இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க..

Actress Suganya: 90கள் காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. ரஜினி கமல் விஜயகாந்த் பிரபு சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். இவர் நடித்து பல திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்திருக்கின்றன. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் வால்டர் வெற்றிவேல், செந்தமிழ் பாட்டு, மகாநதி, இந்தியன் உள்ளிட்ட படங்களாகும்.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் சுகன்யா நடித்திருக்கிறார். இந்தியன் படத்தில் இவருடைய கெட்டப்பை பார்த்து பலரும் பிரமித்து போயிருந்தார்கள். அந்த அளவுக்கு இவருடைய கெட்டப்பை மாற்றி இருந்தார் ஷங்கர். அதனால் இந்தியன் 2 படத்தில் சுகன்யா இருக்கிறாரா இல்லையா என்பது இதுவரை மர்மமாகவே இருக்கிறது.

இதையும் படிங்க: ஜொலிக்கும் அர்ஜூனின் மகள்! பக்கா டிரெடிஷனல் லுக்.. வெளியான திருமண புகைப்படம்

திரைப்படத்திற்கு பிறகு சின்னத்திரையிலும் கால் பதித்தார் சுகன்யா. ஒரு சில சீரியல்களில் நடித்து வந்து அதன் மூலமும் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றிருந்தார். அது மட்டுமல்லாமல் மலையாளத்திலும் ஒரு சில டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் டி சிவா சுகன்யா பற்றிய சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

தயாரிப்பாளர் டி சிவா பிரபு சுகன்யா நடித்த சின்ன மாப்ளே என்ற திரைப்படத்தை தயாரித்தவர். 1993 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்கியது சந்தான பாரதி. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கையில் இவர்களுக்காக ஒரு ஹோட்டலில் அறை புக் பண்ணி இருந்தாராம் சிவா. ஆனால் அதே தேதியில் வேறொரு படத்தில் உள்ள நடிகர்களுக்கும் அறை புக் ஆகியிருந்ததாம் .அதனால் சுகன்யாவுக்கு அறை கிடைக்காமல் இருக்க அந்த ஹோட்டல் உரிமையாளர்களிடம் எவ்வளவோ போராடியும் புக் பண்ண அறை கிடைக்கவில்லையாம்.

இதையும் படிங்க: எந்த கணவனும் இதுக்கு ஒத்துக்க மாட்டான்! பெண் ரசிகையின் செயலால் ஆடி போன மோகன்

அதன் பிறகு அந்த ஹோட்டல் உரிமையாளர் அருகில் இருந்த கட்டிக்கொண்டிருந்த ஹோட்டல் அறையில் வேண்டுமென்றால் தங்கிக் கொள்ளுங்கள் என சொல்லி இருக்கிறார். உடனே டி சிவா சுகன்யாவையும் அவருடைய பெற்றோரையும் அழைத்துச் சென்று அந்த அறையை காண்பித்திருக்கிறார். அது அப்பொழுதுதான் கட்டிக் கொண்டிருந்ததாம்.

அதனால் வெறும் ஜன்னல் மட்டும் இருந்ததாம் ஜன்னலுக்கு கதவு எதுவும் அமைக்கப்படாமல் இருந்திருக்கிறது. இருந்தாலும் சுகன்யா அந்த ஜன்னலை மூடுவதற்கு தான் கொண்டு வந்திருந்த சேலை தன் அப்பாவின் வேட்டி என அதை வைத்து கவர் செய்து பரவாயில்லை நான் இங்கேயே தங்கிக் கொள்கிறேன் என சொன்னாராம். இதைப்பற்றி கூறிய டி சிவா சைடு ஆக்டர் கூட இந்த அளவு அறை கொடுத்தால் ஒத்துக்க மாட்டார்கள். அப்பொழுது சுகன்யா ஒரு டாப் ஹீரோயின். இருந்தாலும் மிகவும் பெருந்தன்மையுடன் வந்து இதற்கு சம்மதம் தெரிவித்தார் என சிவா கூறினார்.

இதையும் படிங்க: உதயநிதிக்கு பெரிய தலைவலியே விஜய்தான்! கேப்டனும் ரஜினியும் சேர்ந்த கலவை.. அசைக்க முடியுமா?

 

Related Articles

Next Story