நடிகை பிரேம பிரியா பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். கொரோனா சமயத்தில், தன்னுடைய அக்கா, அப்பா, மாமனார், கணவர் என எல்லோரும் இறந்துவிட்டதாகவும், பட வாய்ப்புகளும் இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும் கதறி அழுது பேசியிருந்தார்.
அதன் பிறகு ஒரு சில சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில், கணவர் இறந்த பிறகு இரண்டாவது திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில், தன்னுடைய மகள், கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இதையும் படிங்க- வடிவேலுவை யூஸ் பண்ணிட்டு.. அவர் மீதே பழி போடலாமா? நடிகையிடம் பாயும் பயில்வான் ரங்கநாதன்…
கணவர் இறந்த பிறகு ஒருவர் என்னிடம் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளலாம் என்று கேட்டு வருகிறார். ஆனால், எனக்கு பயமாக இருக்கிறது. அதனால் வேண்டாம் என்று கூறிவிட்டேன். அக்கா, அப்பா, மாமனார் எல்லாம் வரிசையாக உயிரிழந்தபோது, கணவர் மட்டும் தான் துணை என்று நினைத்தேன்.
அடுத்த 2 மாதங்களில் அவரும் இறந்துவிட்டார். அப்போது மிகவும் கஷ்டப்பட்டேன். இப்போது தான் ஒரு சில படங்களிலும், சீரியல்களிலும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அதோடு, எனக்கு இருப்பது பெண் பிள்ளை.
கல்லூரி படிக்கும் அவருக்கு படித்து முடித்தவுடன் திருமணம் செய்துவைக்க வேண்டும். நான் இந்த நேரத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால், என் மகளின் வாழ்க்கை பாதிப்படும் என்று பயமாக இருக்கிறது.
அதனால் தான் நான் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என முடிவெடுத்துவிட்டேன். மேலும் அந்த நபர் என் மகளை பத்திரமாக பார்த்துக்கொள்வாரா என்று சந்தேகமாக உள்ளது என்றும் நடிகை பிரேம பிரியா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க- வெளிநாட்டில் திரிஷாவுடன் ஜாலி பர்ச்சஸ் செய்யும் விஜய்!.. அப்ப அந்த நியூஸ் உண்மைதானா?!..
பின்னாளில் தமிழகத்தை…
விதவிதமான ஹோட்டல்களுக்கு…
அஜித் நடிப்பில்…
பிக்பாஸ் டைட்டிலை…
பிரான்ஸ் நாட்டின்…