அந்த வயசுலயே நான் எல்லாத்தையும் பண்ணேன்!.. பகீர் தகவலை சொல்லி அதிரவைத்த டிடி...

பல ஆண்டுகளாக தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்தவர் டிடி. முன்னதாக, ஒரு சில படங்களில், சீரியல்களில் நடித்திருந்தாலும், தொகுப்பாளராக தான் அவர் மிகவும் பிரபலமானார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து கொடி கட்டி பறந்தார்.

சமீப காலமாக அவரை எந்த நிகழ்ச்சிகளிலும் பார்க்க முடியவில்லை. சுந்தர்.சி இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியான காஃபி வித் காதல் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தா். இவர் கடந்த 2014ம் ஆண்டு தன்னுடைய நண்பரும், உதவி இயக்குநருமான ஸ்ரீகாந்த் ரவிசந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இதையும் படிங்க- பட்டுப்புடவையும் மல்லிகை பூவும் அள்ளுது!.. மொத்த பேரையும் ஜொள்ளுவிட வைத்த டிடி…

3 ஆண்டுகள் கழித்து 2017ம் ஆண்டு, இவர்கள் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தொகுப்பாளர் டிடி சமீபத்திய பேட்டி ஒன்றில், திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் குறித்த என்னுடைய புரிதல் வேறாக இருந்தது. இப்போது அது மாறிவிட்டது. திருமணம் செய்துகொள்வது அவரவர் விருப்பம்.

திருமணம் செய்துகொண்டால் தான் வாழ்க்கை முழுமையடையும் என்றெல்லாம் கிடையாது. திருமணம் செய்தே ஆகவேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. திருமணம் வாழ்க்கையில் ஒரு பகுதி தான். திருமணம் செய்யாமல் இருப்பதால், என் வாழ்க்கை குறித்து நீங்கள் யாரும் சர்ட்டிபிகேட் கொடுக்க வேண்டாம். அது எனக்கு தேவையில்லை.

எனக்கான சர்ட்டிபிகேட்டை நானே எனக்கு கொடுத்துக்கொள்வேன். என்னை பற்றி எனக்கு தான் முழுதாக தெரியும் என்று கூறினார். 14,15 வயதிலேயே, நான் பப்புக்கு சென்றேன். பார்ட்டிக்கு செல்வதாக கூறியதால், என் அம்மா அனுமதிக்கவில்லை. ஆனால் என் அப்பா போக சொன்னார். நான் குடிக்க மாட்டேன் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. இன்று வரை என்னை சுற்றி 100 பேர் குடித்தாலும், நான் குடிக்க மாட்டேன் என்று டிடி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- வாவ்!. வேற லெவல் போ!.. ஸ்டன்னிங் லுக்கில் அதிரவிட்ட டிடி!..

 

Related Articles

Next Story