விஜய் ஆண்டனி படத்துல என்ன மனுஷியா கூட மதிக்கல.. நம்ப வச்சி ஏமாத்திட்டாங்க- புலம்பி தள்ளிய சீரியல் நடிகை..

பிரபல சீரியல் நடிகை சஹானா, பகல் நிலவு, தாலாட்டு, கண்ணான கண்ணே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தார தப்பட்டை, சலீம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு அபிஷேக் என்ற மருத்துவருக்கும் திருமணம் ஆனது. தற்போது இவர் கர்ப்பமாக இருக்கிறார். அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

sahana

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் நடித்தபோது, தான் சந்தித்த பிரச்சனைகளை தெரிவித்துள்ளார். அதில் பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்க முயற்ச்சி செய்து வீணடித்துவிட்டேன். முன்னரே சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது, நடிக்காமல் தவறு செய்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் தார தப்பட்டை தவிற வேறு எந்த படங்களிலும் நல்ல கேரக்டர் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.thara thappata

விஜய் ஆண்டனியின் சலீம் படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரம் என்றும் அந்த கேரக்டரால் தான் கதையே நகரும் என்று கூறினார்கள். அதை நம்பி ஒத்துக்கொண்டேன். ஆனால் அதில் நான் நடித்தேன் என்பதே யாருக்கும் தெரியாது. அந்த படத்தில் பல காட்சிகள் இருப்பதாக கூறினார்கள். முகத்தில் ஆசிட் வீசிய காட்சிகளுக்கெல்லாம் பல மணி நேரம் மேக்கப் போட்டு நடித்தேன். ஒரு காட்சியில் சாக்கடையில் இருந்து என்னை எடுக்கும் படி இருக்கும். அதற்காக என் மீது முழுவதும் சிமெண்ட் போல ஏதோ ஒரு கலவையை ஊற்றினார்கள்.

நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஊற்றினார்கள். மூக்கு, காது எல்லாம் அடைத்துவிட்டது. என்னை ஒரு மனிஷயாகவே அவர்கள் மதிக்கவில்லை. அதன்பின்னர் நான் விஜய் ஆண்டனியிடம் போய் நிறைய காட்சிகள் இருக்கு என்றார்கள். ஆனால் எதையுமே எடுக்கவில்லை என்று கூறினேன். அவர் இயக்குநரிடம் பேசினார். அதன் பிறகு சில காட்சிகளை எடுத்தார்கள். ஆனால் அதை எடிட்டில் நீக்கிவிட்டார்கள் என்று நடிகை சஹானா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Next Story