விஜய்க்கு சொன்ன கதையில அஜீத்தை நடிக்க வச்சிட்டேன்... சுந்தர்.சி. போட்டு உடைத்த ரகசியம்!

தமிழ்த்திரை உலகில் வெற்றிப்பட இயக்குனர்கள் பலர் உள்ளனர். ஆனால் நீண்ட நாள்களாக அப்படி இருந்து வருவது சுந்தர்.சி. இவர் ஆரம்பத்தில் உள்ளத்தில் அள்ளித்தா, மேட்டுக்குடி என பல கலகலப்பான படங்களை இயக்கினார். அதன்பிறகு அரண்மனை என்ற த்ரில்லர் ஜானரில் இறங்கினார். அதன் வெற்றி அவரைத் தொடர்ந்து 4 பாகங்கள் வரை எடுக்க வைத்து விட்டது. எல்லாமே சக்கை போடு போட்டு வருகிறது.

இதையும் படிங்க... அவங்களாம் இல்ல.. புது ’தக்’ இவரு தான்.. புதிய அறிவிப்பை வெளிட்ட தக் லைஃப் படக்குழு!…

அந்த வகையில் இயக்குனர் சுந்தர்.சி.யின் அரண்மனை 4 தற்போது பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கிறது. தற்போது சுந்தர.சி. ஒரு பேட்டியில் சுவையான சம்பவம் ஒன்றை சொல்லி இருக்கிறார். அது என்னன்னு பார்ப்போம்.

எனக்குக் கதை சொல்லத் தெரியாது. ஆனால் விஜய் முழு கதையையும் கேட்பார். ஒரு நாள் விஜய்க்கு போன் பண்ணினேன். அவருக்கு ஒரு கதையை சிம்பிளா சொன்னேன். சரி. நான் அப்பாக்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொன்னாரு. சாயங்காலம் எஸ்.ஏ.சி.யிடம் இதுபற்றி பேசும்போது, 'விஜய் முதல்ல இருந்து படம் முடிகிற வரை கதை கேட்பாரு. அந்தப் பழக்கத்தை அவருக்கு நான் உருவாக்கிட்டேன். ஆனால் நீங்க சொன்ன 5 நிமிடக் கதை அவருக்குப் புரியல. ஆனாலும் உங்க கூட சேர்ந்து படம் பண்ணனும்னு அவருக்கு ஆசை. நாம பண்ணலாம்'னு சொன்னார்.

Unnaithedi

Unnaithedi

அப்போ காதலுக்கு மரியாதை படம் வந்த நேரம். செப்டம்பர், அக்டோபர்ல ஒரு தேதி சொல்றாரு. இது நடந்து 10 நாள் இருக்கும். அப்போ ஏவிஎம் ஸ்டூடியோ ஒரு சாங் ரெக்கார்டு முடிந்தது. மிட்நைட் 12 மணி இருக்கும். அசிஸ்டண்ட் வெளியில் வெயிட் பண்றாங்கன்னு சொல்றாரு. வந்து பார்க்குறேன். ஏவிஎம் கார்டன் கிட்ட அஜீத் நிக்கிறாரு.

அவருக்கு நான் டைரக்ட் பண்ணனும்னு ஒரு ஆசை. ஆனா, விஜய் ஏன் அப்படி சொன்னாருன்னு அந்தக் கதையை நான் அஜீத்தை வைச்சி எடுத்துட்டேன். இன்னொன்னு நம்மளை ஒரு ஹீரோ தேடி வந்து சொல்லும்போது நாம 'நோ'ன்னு சொல்லக்கூடாது. அதனால தான் விஜய்க்கிட்ட சொன்ன கதையை அஜீத்துக்குப் பண்ணினேன். அதுதான் 'உன்னைத் தேடி'. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Next Story