விவாகரத்தால் ரொம்ப கஷ்டப்பட்டேன்!.. மனம் விட்டு பேசிய சரத்குமாரின் முதல் மனைவி…

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சினிமா பிரபலம் இல்லை என்பதால், அவரை பற்றி நாம் பெரிதாக கேள்வி பட்டிருக்க மாட்டோம். நடிகர் சரத்குமாருக்கு 1984ம் ஆண்டு சாயா தேவி என்பவருடன் திருமணம் ஆனாது. இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் நடிகை வரலட்சுமி. இவர்கள் கடந்த 2000ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு தான் நடிகர் சரத்குமார், ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் பல ஆண்டுகளாக வெளியே தலைகாட்டாமல் இருந்து வந்த சரத்குமாரின் முதல் மனைவி சாயா, சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் விவாகரத்து, பெண்களுக்கு நடக்கும் அநீதி, திருமண முறிவு ஏற்படுவதற்கான காரணங்கள் உள்ளிட்டவற்றை விரிவாக பேசியுள்ளார்.

varu

சுற்றி இருப்பவர்கள் எல்லாம் திருமணம் செய்துகொள்கின்றனர், வீட்டில் கட்டாயப்படுத்துகின்றனர், வயதாகிறது என்றெல்லாம் நினைத்து பலர் திருமணம் செய்துகொள்கின்றனர். அதன் பிறகு அந்த திருமண வாழ்க்கை பிடிக்காமல் சகித்துக்கொண்டு வாழ்கின்றனர், அல்லது விவாகரத்து செய்து பிரிந்து விடுகின்றனர்.

மேலும் கணவன் மனைவி விவாகரத்து செய்து கொண்டு பிரியும் போது, சிறு குழந்தைகளிடம் தாய் வேண்டுமா? தந்தை வேண்டுமா? என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அது மிகவும் தவறு. ஒரு குழந்தைக்கு தாய், தந்தை இருவரும் தான் வேண்டும் என்று தெரிவித்துள்ளார். விவகாரத்து செய்துகொண்டால் பெண்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

varalaksmi mother

நானும் அதை எல்லாம் கடந்து வந்தேன். தற்போது சேவ் சக்தி என்ற பெயரில் பெண்களுக்காக ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறேன். இதை தொடங்கியது என் மகள் வரலட்சுமி தான். இதன் மூலம் பல பெண்களுக்கு உதவி வருகிறோம் என்று அந்த பேட்டியில் சாயா தேவி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- விஜயகாந்துக்காக அந்த படத்தில நடிச்சேன்… பல வருட சீக்ரெட்டை சொன்ன மாவீரன் சரிதா!..

Related Articles
Next Story
Share it