More
Categories: Cinema News latest news

வாய்ப்பே இல்ல!.. அதை மட்டும் பண்ணவே மாட்டேன்!.. விஷால் விவாகரத்தில் புலம்பிய மிஷ்கின்…

இயக்குநர் மிஷ்கினுக்கும், நடிகர் விஷாலுக்கும் இடையே துப்பறிவாளன் 2 படத்திற்கான பணிகளை தொடங்கிய போது, பிரச்சனை ஏற்பட்டது. இதனால் இந்த படத்திற்கான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. மிஷ்கின் இயக்கத்தில், விஷால், ஆண்ட்ரியா, பிரச்சன்னா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பறிவாளன்.

இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து துப்பறிவாளன் 2 திரைப்படம் அடுத்து வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படம் பாதியில் நின்றுவிட்டது.  இந்த பிரச்சனை குறித்து ஒரு முறை மேடையில் பேசிய இயக்குநர் மிஷ்கின், விஷாலை பொறுக்கி என்று திட்டியருந்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க- சிம்புக்கு கதை சொன்னேன்! ஆனா? மிஷ்கின் சொன்ன தரமான சம்பவம்

அதே போல விஷாலிடம் இது பற்றி கேட்ட போது, மிஷ்கின் ஒரு நம்பிக்கை துரோகி, எப்போதும் நான் அவரை மன்னிக்கவே மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த பிரச்சனை குறித்து சமீபத்தில் நடைபெற்ற அடியே படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின், ஏதோ ஒரு முறை கோபத்தில் விஷாலை பொறுக்கி என்று கூறிவிட்டேன். விஷால் பொறுக்கி எல்லாம் இல்லை.

நல்ல மனிதர் தான். அவரும்  நான் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக பல இடங்களில் கூறி வருகிறார். நான் எந்த நம்பிக்கை துரோகமும் செய்யவில்லை. நாங்கள் சண்டை போட்டுக்கொண்டோம். அது உண்மை தான். அப்போது இருந்த கோபத்தில் அப்படி கூறிவிட்டேன். இப்போது எனக்கு கோபம் இல்லை.

ஆனால் விஷாலுக்கு ஆணவம் அதிகம். நான் விஷாலை மிஸ் செய்கிறேன். அவருடன் பணியாற்றியது மறக்கமுடியாத ஒரு நல்ல அனுபவம். ஆனால் அதற்காக நான் அவரிடம் வாய்ப்பு கேட்கிறேன் என்று அர்த்தம் இல்லை. இனி நிச்சையமாக நான் விஷாலுடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- விஷால் சரியான விஷம்.. இதனாலதான் சண்டையே வந்துச்சி.. கோபத்தில் வெடித்த அப்பாஸ்!..

Published by
prabhanjani

Recent Posts