படப்பிடிப்புக்கு யாராவது லேட்டா வந்தா அஜித் இதைதான் செய்வார்.. நடிகை சொன்ன சீக்ரெட்..

Published on: August 4, 2023
ak
---Advertisement---

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்து வருகிறார் அஜித்குமார். இதுவரை 60 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். அடுத்ததாக அவர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் நடிகை வடிவுக்கரசி சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் பற்றி பல தகவல்களை தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட படங்களிலும், பல சீரியல்களிலும் நடித்துள்ளார் வடிவுக்கரசி.

இவர் நடிகர் அஜித்துடன் ராஜாவின் பார்வையிலே, வான்மதி, நீ வருவாய் என ஆகிய 3 படங்களில் நடித்துள்ளார். அப்போது நடந்த சுவாரசியமான விஷயங்களை நடிகை வடிவுக்கரசி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். வான்மதி படத்தில் நடித்துமுடித்த போது, அந்த படத்தின் தயாரிப்பாளர் அஜித் டப்பிங் கொடுக்க வேண்டாம், வேறு யாரையாவது வைத்து டப்பிங் செய்யலாம் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க- அப்படி கூப்பிடாதீங்க ப்ளீஸ்!.. பலவருடங்களுக்கு முன்பே சொன்ன ரஜினி.. இவரயா அடிக்கிறீங்க!..

அப்போது நான் தான் அவரின் தமிழ் நன்றாக புரிகிறது. ஸ்டைலாக இருக்கிறது. அவரையே கொடுக்க வைக்கலாம் என்று தயாரிப்பாளரிடம் பேசினேன். அஜித்குமாரும் ரஜினியை போல திரும்ப திரும்ப எல்லா டயலாக்கையும் வெவ்வேறு மாடுலேஷனில் படித்து பார்த்துக்கொண்டே இருப்பார். அனைவரிடமும் மிகவும் அன்பாக பழகுவார். அவர் பல உதவிகளை செய்வார். அது வெளியே தெரியாது.

ஒருமுறை நீ வருவாய் என படத்தின் படப்பிடிப்பிற்கு அந்த படத்தின் உதவி இயக்குநர் ஒருவர் தாமதமாக வந்தார். ஏன் தாமதமானது என்று இயக்குநர் கேட்ட போது, என்னிடம் வண்டி இல்லை. போரூரில் இருந்து நான் பஸ்ஸில் தான் வர வேண்டும். பஸ் கிடைக்க லேட்டாகி விட்டது என அவர் பதிலளித்துள்ளார். இதனை கேட்ட அஜித் உடனேயே, தன்னுடைய பணத்தில் ஒரு டிவிஎஸ் 50 வாங்கி கொடுத்துவிட்டார்.

அதுவும் அன்று மாலையே வாங்கி கொடுத்துவிட்டார். கடையில் பார்த்தால், அந்த உதவி இயக்குநருக்கு வண்டி ஓட்ட தெரியாது. எனவே அவருக்கு ஒரு டிரவைவரையும் சேர்த்து ஏற்பாடு செய்தனர். அப்படி படப்பிடிப்பில் யாருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் அவர் செய்து கொடுப்பார். அது பற்றி வெளியே சொல்லி, விளம்பரம் தேடிக்கொள்ள மாட்டார் என்று வடிவுக்கரசி அஜித் பற்றி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- இவனுக்கெல்லாம் எதுக்கு வாய்ப்பு கொடுக்குற!.. சிம்புவிடம் சீறிய கவுண்டமணி!..

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.