எல்லாம் வேஷம்! ஞானினு காட்ட இப்படியெல்லாம் பண்றாரு - இளையராஜாவை விமர்சிக்கும் பிரபலம்..

தமிழ் திரையுலகில் இசையில் பெரிய சாதனையை படைத்தவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட படங்கள், 7000க்கும் மேற்பட்ட பாடல்கள், 20000க்கும் மேற்பட்ட கச்சேரிகள் என தன்னுடைய வளர்ச்சியை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார். அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார் இளையராஜா.

ilai1

ilai1

கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்த இளையராஜாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியது எஸ்.பி.பாலசுப்பிரமணியம்தானாம். ஆனால் ஒரு கட்டத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல் என்னுடைய பாடல்களை மேடையில் பாடக்கூடாது என எஸ்.பி.பிக்கே ஒரு உத்தரவை போட்டார் இளையராஜா. இப்படி தன்னுடைய ராஜாங்கத்தை வளர்த்தப் பிறகு இளையராஜாவின் போக்கே மாறியது என்றே கூறலாம்.

இதையும் படிங்க : செம மாஸா அறிவிப்பு வெளியாகி நின்றுபோன விஜயகாந்த் படங்கள்!. – வந்திருந்தா வேற லெவல்…

அதுமட்டுமில்லாமல் வைரமுத்துவிடமும் தன்னுடைய சுயரூபத்தை காட்டினார் இளையராஜா. அதிலிருந்தே இளையராஜாவும் வைரமுத்துவும் பேசிக் கொள்வதில்லையாம். இவர்கள் பிரச்சினையை தீர்த்து வைக்க ரஜினியும் எவ்ளவோ போராடினாராம். ஆனால் அது சுமூகமாகவில்லை என்று சொல்லப்படுகிறது.

ilai2

ilai2

இப்படி பேரும் புகழும் வந்த பிறகு இளையராஜா செய்யும் இந்த மாதிரியான செயலால் பல பிரபலங்கள் கடுப்படைந்திருக்கின்றனர். ஆனால் அதையெல்லாம் இளையராஜா பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் காந்தராஜ் இளையராஜாவை பற்றி பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

இதெல்லாம் ஒரு விளம்பரத்துக்காகத்தான் இளையராஜா செய்கிறார் என்று கூறினார். அதாவது தினசரி பத்திரிக்கைகளில் எப்படியாவது ஒரு நடிகையை பற்றி செய்தி வராமல் இருக்காது. ஏனென்றால் அது ஒரு விளம்பரம். அதைப் போலவே தான் இளையராஜாவும். இப்படி எதாவது செய்தால்தான் அவரை பற்றி ரசிகர்களின் பார்வை போகும் என்று சொல்கிறார்.

ilai3

ilai3

மேலும் இளையராஜாவை பற்றி தெரியாத ஒரு விஷயத்தை சொல்கிறேன் என்று ஒரு தகவலை பகிர்ந்தார். இளையராஜாவின் உண்மையான பெயர் டேனியல் ராஜையாவாம். அடிப்படையில் இளையராஜா கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவராம். தேவாலயங்களில் கோரஸ் பாடிக் கொண்டிருந்தாராம். அவருடன் பாடியவர் காந்தராஜின் நண்பர் ஒருவராம்.

இதையும் படிங்க : காலம் போன காலத்துல குழந்தை பெற்றுக்கொண்ட பிரபலங்கள்- அட கடவுளே.. இத்தன பேரா..

இதையெல்லாம் மறைத்து சினிமாவில் தன்னை ஞானியாக காட்டத்தான் ஜிப்பா அணிந்து கொண்டு தன்னை சாமி என்று அழைத்துக் கொண்டிருக்கிறார் இளையராஜா. இதுவும் ஒரு விளம்பரம்தான் என்று ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்தார் காந்தராஜ்.

 

Related Articles

Next Story