Ilaiyaraja: எல்லாமே கரெக்டா இருக்கு.. எதுக்கு இழப்பீடு? ஆழம் தெரியாமல் காலை விட்ட இளையராஜா

ajith_ilai
Ilaiyaraja:ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாக இளையராஜாவின் நிலைமை இப்போது மாறி விட்டது. ராயல்டி என்ற ஒரு விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு இளையராஜா தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் ரசிகர்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்து வருகிறார். இந்த பிரச்சினை இப்போது இல்லை. பாடகர் பால சுப்பிரமணியன் இளையராஜா இசையில் அவர் பாடிய பாடலை இளையராஜா அனுமதியில்லாமல் பாடிவிட்டார் என்று தெரிந்ததும் பாலசுப்பிரமணியனுக்கே தடை விதித்தார் இளையராஜா.
அப்போதிலிருந்து இந்த பிரச்சினை பெரிய பூதாகரமாக மாறியது. அதற்கு அடுத்த படியாக மஞ்சுமெல் பாய்ஸ் படத்திலும் தன் பாடலை பயன்படுத்திவிட்டார்கள் என அந்தப் பட நிறுவனத்திற்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா. உண்மையில் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களை சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொண்டு வேறொரு ஆடியோ கம்பெனிக்கு விற்றுவிட்டார்.
அப்படி பார்க்கும் போது அவர் இசையில் அமைந்த பாடல்கள் அந்த ஆடியோ நிறுவனத்திற்கு மட்டும்தான் சொந்தமானது. இளையராஜா சொந்தம் கொண்டாட வாய்ப்பே இல்லை. அவருடைய இசையில் அமைந்த பாடல்களை மற்ற பட நிறுவனங்கள் பயன்படுத்த ஆசைப்பட்டால் அந்த ஆடியோ நிறுவனத்திடம் மட்டும் அனுமதி பெற்றால் போதுமானது. அப்படித்தான் குட் பேட் அக்லி பட நிறுவனமும் சம்பந்தப்பட்ட ஆடியோ கம்பெனியிடம் என்.ஓ.சியை பெற்றுக் கொண்டுதான் அந்த பாடல்களை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அப்படி இருக்கும் போது இளையராஜாவுக்கு எப்படி சொந்தமாகும். அப்படிப்பார்த்தால் மெட்டு போடுவது மட்டும்தான் இளையராஜா. மற்றபடி நோட்ஸ்களை கொடுத்து அதன் பின் அவருடைய ட்ரூப்தான் இசையமைக்கிறார்கள். அப்படியானால் அவர்களும்தானே சொந்தக் கொண்டாட வேண்டும். சொல்லப்போனால் அவர் ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் சம்பளம் வாங்கிக் கொண்டுதான் இசையே அமைக்கிறார்.

அந்த சம்பளத்திற்கு தன்னுடைய இசையையும் கொடுத்துவிடுகிறார். அப்போ அந்த தயாரிப்பு நிறுவனம்தான் சொந்தம் கொண்டாட வேண்டும். சரி போனால் போகுது என மஞ்சுமெல் பாய்ஸ் பட நிறுவனம் சினிமாவில் மதிக்கத்தக்க ஒரு நபராக இளையராஜா இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் தாங்கள் என்.ஓ.சி வாங்கினாலும் இவர் இழப்பீடு கேட்டார் என்பதற்காக 60 லட்சத்தைகொடுத்து இளையராஜா வாயை அடைத்தார்கள்.
ஆனால் குட் பேட் அக்லி பட நிறுவனம் என்ன செய்யப் போகிறது என்பது தெரியவில்லை. இதற்கிடையில் இளையராஜாவின் இத்தகைய செயல் பல பேருக்கு எரிச்சலடைய வைத்திருக்கிறது.குறிப்பாக அஜித் ரசிகர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார் இளையராஜா என இத்தகைய தகவலை பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கார் பாலாஜி கூறினார்.