Connect with us
ilai

Cinema News

‘கதை கேளு..கதை கேளு’ பாடலில் இசைஞானி செய்த மேஜிக்! இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு விஷயம்

Ilaiyaraja: தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக இசையில் கோலோச்சி வருபவர் இசைஞானி இளையராஜா. தன் தனித்துவமான இசையால் காலந்தோறும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். எக்காலத்தும் செவிக்கு இனிமையை தரும் இசையை இளையராஜாவால் மட்டும்தான் கொடுக்க முடியும். 2 கே கிட்ஸ் உட்பட அனைவருமே இளையராஜா இசையில் மயங்கிதான் கிடக்கின்றனர்.

சுற்றுலா செல்வதில் இருந்து வீட்டின் சுப நிகழ்ச்சி வரை அனைத்து விதமான விழாக்களானாலும் அங்கு முதல் இசையாய் ஒலிப்பது இளையராஜாவின் இசைதான். இப்படிப்பட்ட பெருமையை உடைய இளையராஜா ஒரு காலத்தில் இந்த சினிமாவையே தனதாக்கிக் கொண்டிருந்தார். அந்தளவுக்கு பிஸியாக இருந்த காலம். ஒரே நாளில் 4 அல்லது5 படத்திற்கும் இசையமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் இதுதானா? நெல்சன் திலீப்குமார் போட்ட ஸ்கெட்ச்…

இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என இளையாராஜாவின் வாசலில் தவமிருந்து காத்துக் கொண்டிருந்த காலமெல்லாம் நடந்திருக்கிறது. இந்த நிலையில் பிரபல இயக்குனரான பஞ்சு அருணாச்சலத்தின் மகனும் நடிகருமான சுப்பு இளையராஜா செய்த மேஜிக்கை பற்றி ஒரு பேட்டியில் கூறினார். கமல் நடித்த மைக்கேல் மதன காமராஜர் திரைப்படம் முதலில் 70000 அடிவரை எடுக்கப்பட்டிருந்ததாம்.

அதனால் அந்தப் படத்தில் இரண்டு இடைவெளிகள் வைத்துவிடலாம் என எண்ணியிருக்கின்றனர். ஆனால் அது சரி வராது என்று நினைத்து எப்படியாவது படத்தை 40000 அடிவரை கொண்டு வர வேண்டும் என திட்டமிட்டிருக்கிறார்கள். அதில் ஃப்ளாஷ்பேக் காட்சி மட்டும் 4000 அடிவரை இருந்ததாம். அதனால் இந்த ஃப்ளாஷ்பேக் போர்ஷனை முழுவதும் ஒரே பாடலுக்குள் கொண்டு வர வேண்டும் என இளையராஜாவிடம் சொல்லியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: 50 வருட சினிமா அனுபவம்.. சுக்கு நொறுக்கிய பா.ரஞ்சித்! ரஜினிக்கு காட்டிய நன்றிக்கடனா இது

உடனே இளையராஜா ரிக்கார்டிங் தியேட்டருக்கு சென்று உடனே வரிகளை சொல்லி ஒரே நாளில் அதுவும் சரியாக 30 நிமிடத்திற்குள் பாட்டினை கொடுத்துவிட்டாராம். அந்தப் பாடல்தான் ‘கதை கேளு கதை கேளு’ என்ற பாடல். இந்த பாடலுக்குள் படத்தின் ஃப்ளாஷ்பேக் முழுவதையும் சொல்லிவிடுவார்கள்.

அன்று தான் சத்யராஜ் நடித்த ‘ நடிகன்’ திரைப்படத்தின் ரி ரிக்கார்டிங்கும் கொடுப்பதாக இளையராஜா இருந்தாராம். அதற்காக ராம நாராயணன் காத்துக் கொண்டிருந்தாராம். ஆனால் இளையராஜா இந்த வேலையாக இருந்ததால் இன்று நமக்கு கிடைக்காது என நினைத்து சென்றுவிட்டாராம்.

இதையும் படிங்க: சன் டிவி டாப் 10 நிகழ்ச்சி மூலம் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம்!.. மொத்த வாழ்க்கையும் மாறிப்போச்சே!..

 

google news
Continue Reading

More in Cinema News

To Top