Ilayaraja: இசையமைப்பாளர் இளையராஜா எப்போதுமே தனக்கு தோன்றியதை எந்த இடமாக இருந்தாலும் யோசிக்காமல் பேசிவிடுவார். அப்படி அவர் பேசுவது சில நேரங்களில் கேட்பவரை கடுப்பேற்றியதும் தவறாமல் நடந்து இருக்கிறது. அப்படி ஒரு சம்பவத்தினை பிரபல விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவர் பேட்டியில் இருந்து, இளையராஜா பயோபிக்கில் எப்போதுமே நல்லதை சொல்லி எடுத்தால் அது படமாக இருக்கும். ஒரு உண்மையான பயோபிக்கில் உண்மை முகங்களும், சில கசப்பான முகங்களும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இளையராஜாவின் வாழ்க்கை அப்படிப்பட்டது. அவர் பிஸியாக இருந்த காலக்கட்டத்தில் கூட அவரை நேரில் சென்று பார்க்கும் தைரியம் ரஜினி மற்றும் கமலுக்கு தான் இருந்தது.
இதையும் படிங்க: ஜெய்சங்கரிடம் எம்.ஜி.ஆர் கேட்ட அந்த கேள்வி!.. அதுக்கு பின்னால் இருக்கும் ஸ்டோரி இதுதான்!..
ஒருமுறை ரஜினி இளையராஜாவை சந்திக்க வந்தார். இருவரும் சாமி என்று தான் பேசிக்கொள்வார்களாம். அவர்கள் வெளியில் போகும் போது ரஜினி தான் காரை ஓட்டி செல்வாராம். இந்த பயோபிக்கில் வைரமுத்து, இளையராஜாவுக்குமான பிரச்னையை சொல்ல வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மானை எப்படி ஏற்றுக்கொண்டார் என்பதை சொல்லினால் தான் அது சரியாக இருக்கும்.
இயக்குனர் பாசிலுக்கு, இளையராஜாவை அவ்வளவு பிடிக்குமாம். அப்படி அவர் இயக்கிய மலையாள படத்தினை தமிழில் உருவாக்க நினைத்தார்களாம். அதற்கு பாசில் வைக்கும் ஒரே கண்டிஷன் இளையராஜா தான் இந்த படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பதே. தயாரிப்பாளர் அதற்கு போராட ஒரு வருசம் கழித்தே அப்பாயின்மெண்ட் கிடைக்கிறதாம்.
இதையும் படிங்க: அந்த எம்.ஜி.ஆர் படத்தில் பிடிக்காமல்தான் நடித்தேன்!. ஓப்பன் பேட்டி கொடுத்த ஜெயலலிதா!..
மலையாள படத்தினை பார்த்த இளையராஜாவுக்கு அதில் வரும் பாடல் ரொம்பவே பிடித்து போகிறது. சித்ராவின் அறிமுக பாடல் தான் அது. அவரையே தமிழுக்கு அழைத்து வந்து பூவே பூச்சுடவா பாடலை பாட வைக்கின்றனர். இந்த பாடலை சித்ரா பாடி முடித்ததும் மொத்த ஆர்டிஸ்ட்டும் கைத்தட்டுகின்றனராம். இந்த கைத்தட்டல் யாருக்கு எனக் கேட்க அவர்கள் எல்லாம் இளையராஜாவை கைக்காட்டுகின்றனர்.
ஆனால் இளையராஜா இந்த பாட்டின் பாராட்டுக்கு உரியவர் எம்.எஸ்.விஸ்வநாதன் தான். பாசமலர்கள் படத்தில் வந்த மலர்ந்தும் மலராத பாடலின் பிம்பம் தான் பூவே பூச்சுடவா பாடல் என்றாராம். இதை கேட்ட அங்கிருந்தவர்கள் வாய் பிளந்தனராம். கோலிவுட்டின் கடவுள் என அழைக்கப்படும் இளையராஜா இப்படி பேசுகிறாரே என வாய் அடைத்து போனார்களாம்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…