Connect with us

Ilayaraja: அந்த ஒரு வசனத்திற்காக இசையமைக்க மறுத்த இளையராஜா

ilayaraja

Cinema History

Ilayaraja: அந்த ஒரு வசனத்திற்காக இசையமைக்க மறுத்த இளையராஜா

தமிழ் சினிமாவி 80களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் ஆர்.சுந்தர்ராஜன். முதல் படமான பயணங்கள் முடிவதில்லை சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து அப்போதைய முன்னணி நடிகர்கள் பலரும் இவருடன் படம் பண்ண காத்திருந்தனர்.

தொடர்ந்து விஜயகாந்துடன் வைதேகி காத்திருந்தால், அம்மன் கோவில் கிழக்காலே, என் ஆசை மச்சான், ரஜினியுடன் ராஜாதி ராஜா என அவரது பல படங்கள் சூப்பர்ஹிட்.

ஆர்.சுந்தர்ராஜன் சத்யராஜூடன் இணைந்து திருமதி பழனிச்சாமி என்ற படத்தினை இயக்கினார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகின. ஆனல் இந்த படத்தின் துவக்கத்தில் இளையராஜா இப்படடத்திற்கு இசையமைக்க மறுத்தாராம். அதற்கான காரணத்தை இயக்குனர் கூறியபோது, திருமதி பழனிசாமி படத்தில் 1000 கோவில் கட்டுவதை விட, 10000 பேருக்கு சாப்பாடு போடுவதை விட ஒருத்தனை படிக்க வைப்பது அதிக புண்ணியம் என்று வசனம் வைத்தேன். ஆனால் இளையராஜா தற்கு சம்மதிக்கவில்லை. கடவுள் இல்லாமல் எல்லோரும் வந்துவிட்டார்களா என்று கேட்டு படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று மறுத்தார். பிறகு அந்த வசனத்தை மாற்றி வைத்த பினே இளையராஜா சம்மதித்தார் என்று கூறினார்.

To Top