Connect with us

Cinema News

இன்று இளையராஜாவுக்கு 81வது பிறந்த நாள்; இசைஞானிக்கு குவிகிறது ரசிகர்களின் வாழ்த்து

இளையராஜா, தமிழ் சினிமா வரலாற்றில் இசை சகாப்தமாக வாழ்ந்துவரும் இசைஞானி. கடந்த 1943ம் ஆண்டில், இதே நாளில் பிறந்த இளையராஜா, இன்று தனது 80வது பிறந்த நாளை கொண்டாடி கொண்டிருக்கிறார். கடந்த 1976ம் ஆண்டில், அன்னக்கிளி என்ற படத்தின் மூலம், தமிழ் சினிமா இசை உலகில் அறிமுகமானவர் இளையராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என, ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். இசை உலகில், ஒரு சக்கரவர்த்தியாக இளையராஜா வலம் வருகிறார் என்றால் மிகையல்ல. அதேவேளையில், அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை சொல்லி, கடுமையாக விமர்சனங்களிலும் இளையராஜா சிக்கிக்கொள்கிறார்.


கடந்த 2010ம் ஆண்டில் பத்ம பூஷன் விருதும், 2018ம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதும் பெற்றவர். அதுதவிர, இதுவரை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்குமுறை பெற்றவர். சிம்பொனி இசையில் ‘மேஸ்ட்ரோ’ என அழைக்கப்படுகிறார்.கடந்தாண்டு ஜூலை மாதம், நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினர் எம்.பி., பதவி இளையராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தேனி மாவட்டம், பண்ணைபுரத்தை சேர்ந்தவர். இவரது பெற்றோர் ராமசாமி – சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், ஆர்.டி பாஸ்கர், அமர்சிங் என்கிற கங்கை அமரன் ஆகியோர், இளையராஜாவின் உடன்பிறந்த சகோதரர்கள். இளையராஜாவின் மனைவி ஜீவா, சில ஆண்டுகளுக்கு முன் காலமாகி விட்டார். கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி ஆகியோர் இளையராஜாவின் பிள்ளைகள். இவர்களும் இசைத்துறையில், வெற்றியாளர்களாக பவனி வருகின்றனர்.


இளையராஜா, இசை உலகில் தனி ஆளுமையாக தன்னை நிரூபித்தவர். கடந்த 1980 – 90 களில், இளையராஜா பாடல்களை உச்சரிக்காத உதடுகளே இருக்க முடியாது. இன்றும் அவரது பாடல்கள், சாகா வரம்பெற்ற பாடல்களாக தான் இருக்கின்றன. குறிப்பாக, இதயம் ஒரு கோவில் பாடலை, இளையராஜாவே எழுதி, இசையமைத்து பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, அவரது குரலில், 400க்கும் மேற்பட்ட பாடல்களை தனது சொந்த குரலில் பாடி இருக்கிறார். இதுதவிர தமிழ்நாடு, பிற மாநிலங்கள் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் அவரது இசை நிகழ்ச்சிகள் நேரடியாக நடத்தப்பட்டு, பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில், அவரது இசை மழையில் நனைந்து திக்குமுக்காடி போய் விடுகின்றனர்.
இன்று தனது 80வது பிறந்த நாளை கொண்டாடும் இளையராஜா என்னும் இளை ஞானிக்கு, வாழ்த்து மலர்கள் குவிகின்றன…அள்ள அள்ள குறையாமல் குவிந்துகொண்டே இருக்கின்றன.

google news
Continue Reading

More in Cinema News

To Top