கையில் பணம் இருக்காது.. ஆனா ஆப்பிள் போன் இருக்கும்!. ராஜா பற்றி கசிந்த தகவல்…

by சிவா |   ( Updated:2025-04-16 01:43:11  )
ilayaraja
X

Ilayaraja: இளையராஜா பொதுவாகவே தொழில் நுட்ப வளர்ச்சி பின்னால் ஓடாதவர். ஏ.ஆர்.ரஹ்மான் வந்தபோது அவர் மேற்கத்திய இசையை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தார். அதாவது புதிய இசைக்கருவிகளை கொண்டு கம்ப்யூட்டரில் இசையை உருவாக்கினார். அவருக்கு பின்னால் வந்த ஹரிஸ் ஜெயராஜும் அதையே செய்தார். இப்போது அனிருத் கூட இதைத்தான் செய்து வருகிறார். கால மாற்றத்தில் இதை தடுக்க முடியாது.

அதேநேரம், இளையராஜா போன்ற இசை மேதைகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மனிதர்கள் இசைக்கருவிகளை வாசித்து வரும் இசைதான் சிறந்தது. கம்ப்யூட்டர், ஏ.ஐ போன்ற செயலிகள் மூலம் வரும் இசையில் ஜீவன் இருக்காது என பல பேட்டிகளிலும் அவர் தொடர்ந்து சொல்லி வருகிறார்.

80களில் இளையராஜா இசையமைத்து இப்போதுவரை பலராலும் சிலாகிக்கப்பட்டு வரும் பல பாடல்கள் எளிமையான இசைக்கருவிகளால் உருவாக்கப்பட்டவைதான். அதுவும் இளையராஜா நோட்ஸ் எழுதி இசைக்கலைஞர்களால் வாசிக்கப்பட்டு உருவானவை. அதுதான் காலம் தாண்டியும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

ilayaraja

இசையில் மட்டுமில்லை. உடையிலும் அவர் எப்போதும் எளிமைதான். துவக்கத்தில் கலர் கலராக பேண்ட் சர்ட் அணிந்து காணப்பட்ட இளையராஜா எப்போது ஆன்மிகத்தில் தீவிரமாக நுழைந்தாரோ அப்போது முதல் வெள்ளை நிற வேட்டியும், வெள்ளை நிற பைஜாமாவும் அணிய துவங்கினார். கடந்த 50 வருடங்களுக்கும் மேல் இது தொடர்கிறது.

அதேநேரம், இளையராஜா பற்றிய ஒரு ஆச்சர்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இளையராஜாவுக்கு ஆப்பிள் போன் மீது அதிக ஆர்வம் இருக்கிறதாம். புதிதா ஒரு ஆப்பிள் போன் மாடல் சந்தைக்கு வந்துவிட்டால் மறுநாளே ராஜாவின் கையில் அது வந்து சேர்ந்துவிடுமாம். தும்பைப் பூ போன்ற வெண்மை நிறத்தில் இருக்கும் கைக்குட்டையும், ஆப்பிள் போனும் வெளியே செல்லும்போது அவரின் கையில் இருக்கும்.

அதேநேரம், வெளியா போகும் போகும்போது கையில் பணம் வைத்துக்கொள்ளும் பழக்கம் அவருக்கு இல்லையாம். ஆனால், ஆப்பிள் போன் மட்டும் கையில் இருக்குமாம். அந்த ஆப்பிள் போனில் வால்பேப்பராக கருப்பு வெள்ளை நிறத்தில் ரமணர் புகைப்படம் இருக்குமாம்.

Next Story