நாசரை காலில் விழ வைத்த இளையராஜா!.. அந்த பாட்டுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா?!...

பாலச்சந்தர் மற்றும் மணிரத்தினம் ஆகியோரின் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நாசர். மிகவும் திறமையான நடிகராக பார்க்கப்படுபவர். இவரின் திறமையை புரிந்து சரியாக பயன்படுத்தியவர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன் என்றே சொல்லலாம். நாயகன் படத்தில் நாசருக்கு முக்கியமான வேடத்தை கொடுத்தார் கமல்.

அதன்பின் பல திரைப்படங்களிலும் கமலுடன் இணைந்து நடித்திருக்கிறார். அதில், நாயகன், குருதிப்புனல், மைக்கேல் மதன காமராஜன், தேவர் மகன், அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களையும் சொல்லலாம். தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராக நாசர் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: 12 வயலின்.. 10 ஆயிரம் சம்பளம்!.. இளையராஜா போட்ட கிளாசிக் பாடல்கள்!.. அட அந்த படமா?!…

பல திரைப்படங்களில் கதாநாயகன் மற்றும் கதாநாயகிகளுக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். பல திரைப்படங்களில் வில்லனாகவும் மிரட்டி இருக்கிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி பல தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார் நாசர். இதில், ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் முக்கியமான ஒன்றாகும்.

இந்த படத்தில் வில்லன் ராணாவின் அப்பாவாக கலக்கி இருந்தார். எம்டன் மகன் உட்பட பல திரைப்படங்களிலும் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார். அதோடு, மாயன், அவதாரம், தேவதை என சில படங்களை இயக்கியிருக்கிறார். இந்த எல்லா படங்களுக்குமே இசையமைத்தவர் இசைஞானி இளையராஜாதான்.

இதையும் படிங்க: இளையராஜா காப்பி அடித்த பாடல்கள்… பாக்கியராஜ் கங்கை அமரனுடன் சேர்ந்தது இதற்குத் தானா..?!

அவதாரம் படம் பற்றி சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய நாசர் ‘இந்த படத்தில் ஒரு பாடலுக்கான டியூனை போட்டார் ராஜா. ஆனால், எனக்கு அதுபிடிக்கவில்லை. மிகவும் சிறு பிள்ளைத்தனமாகவும், முட்டாள்தனமாகவும் யோசித்து ‘இந்த டியூன் வேண்டாம் சார்’ என் அவரிடம் சொன்னேன். எனக்கு இசையில் பெரிய ஞானம் இல்லை. தொடர்ந்து படம் இயக்கும் இயக்குனரும் நான் இல்லை.

அவரோ சிரித்துகொண்டே ‘நீ போயா.. போயிட்டு 4 மணிக்கு வா.. நல்லா வரும்’ என சொன்னார். 4 மணிக்கு போகும்போது ஒரு புது மெட்டை போட்டு காட்டுவார் என எதிர்பார்த்தேன். ஆனால், அதே டியூன். முழுபாடலையும் ரெக்கார்ட் செய்யும்போது கேட்டு அசந்து போனேன். ‘அதுதான் தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ பாடல்’. இசையுலகமே திரண்டு வந்து இசையமைத்தது போல இருந்தது. காலில் விழுந்து ‘என்னை மன்னிச்சிடுங்க சார்’ என்றேன். என்னை பார்த்து சிரித்தார்’ என்று சொன்னார் நாசர்.

 

Related Articles

Next Story