Connect with us

Cinema History

நான் தலைக்கணம் பிடித்தவனா? – இளையராஜா சொன்ன பதிலை பாருங்க!

1976 ஆம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. தமிழ் சினிமாவில் உள்ள எந்த ஒரு இசையமைப்பாளரை விடவும் அதிகமான பாடல்களை இசையமைத்தவர் இளையராஜா.

மூன்று முதல் நான்கு படங்களுக்கு ஒரே நாளில் அமர்ந்து இசையமைக்கும் திறன் கொண்டவர் இளையராஜா. இதனால் தமிழ் சினிமாவில் இசை அரசன் என்று பலராலும் அன்புடன் அழைக்கப்படுகிறார்.

இப்போது வரை அவரது பாட்டிற்கான மதிப்பு குறையவேயில்லை. தற்சமயம் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படத்திற்கு கூட அவர் இசை அமைத்திருந்தார். அந்த பாடல்களும் கூட நல்ல ஹிட் கொடுத்தன. தற்சமயம் மாடர்ன் லவ் என்கிற வெப் சீரிஸ்க்கு இவர் இசையமைத்துள்ளார்.

இளையராஜாவின் பதில்:

இசையில் பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் இளையராஜா குறித்து தொடர்ந்து அவதூறுகள் இணையத்தில் பரவி வருகின்றன. சினிமாவில் பணிபுரிந்த பலரும் அவரைப் பற்றி கூறும் பொழுது இளையராஜா மிகவும் திமிர் பிடித்தவர், மிகவும் தலைங்கனம் கொண்டவர் என்று கூறியுள்ளனர். அதற்கு ஏற்றாற் போல மனோபாலாவின் இறப்பின்போது சர்ச்சையை ஏற்படுத்தும் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

ilayaraja

ilayaraja

சமீபத்தில் ஒரு பேட்டியில் இளையராஜாவிடம் இது குறித்து கேட்கும் பொழுது அதற்கு பதில் அளித்த இளையராஜா, எனக்கு தலைகனம் இருக்கு எனக் கூறுகிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு தலைகனம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும், என கூறியுள்ளார்.

மேலும் தற்போதைய இசை எப்படி இருக்கிறது என்பதை பற்றி அவர் பேசும்பொழுது மூன்று தலைமுறையாக இசையமைத்து வருகிறேன் ஒவ்வொரு முறையும் புதிதாக ஒரு பாடலை கொண்டு வர வேண்டும் என்று தான் நான் பாடலை இசை அமைகிறேன். அதனால்தான் எனது பாடல்கள் இப்போது உள்ள தலைமுறைகளுக்கும் பிடித்த வகையில் உள்ளன எனக் கூறினார்.

இதையும் படிங்க: அஜித்துடன் இருந்த மனவருத்தம்?.. வெங்கட் பிரபுவை விஜய் ஓகே பண்ண இதான் காரணமா?

google news
Continue Reading

More in Cinema History

To Top