Connect with us

Biggboss Tamil 5

பட்டையை பத்தி பேசி வாங்கி கட்டிக்கிட்ட அபிஷேக் – காலில் விழுந்து சமாதானம்…

யூடியூபர் அபிஷேக் ராஜா தனது நக்கலான சேட்டையை ஆரம்பித்து, தாமரை செல்வி கிட்ட நல்ல வாங்கி கட்டிக்கிட்டார். வீட்டுக்குள்ள சண்டை ஆரம்பம் ஆயிருச்சி அஹா… அஹா… பாக்கும் போதே படக்குனு காலுல விழுந்துட்டாரு அபிஷேக்… பத்தாதற்கு இம்மான் அண்ணாச்சி வேற, “2 லட்சம் ஓட்டு போச்சுனு..” சொன்னதும் பதறிப்போய் மன்னிப்பு கேட்டு இருக்கிறார் அபிஷேக் ராஜா…

யூடிப்பில் ரிவ்யூ சொல்வது போல, பிக்பாஸ் வீட்டிற்குள் அனைவரைப் பற்றியும், அபிஷேக் ராஜா ரிவ்யூ சொல்ல ஆரம்பித்தார். முதலில், ஐக்கி பற்றி பேசய அபிஷேக், ”ஐக்கி பெயரிலிருந்து தலைமுடி வரை அனைத்தும் வித்தியாசம். பல முறை இந்த படத்தை லூப்பில் பார்த்தால் தான் படத்தின் டைட்டிலே புரியும் அந்த அளவுக்கு ஒரு வித்தியாசமான படம்” என்று கூறினார்.

அடுத்ததாகத் தாமரைச்செல்வி பற்றி ரிவ்யூ கொடுத்த அபிஷேக், “பட்டையை அடிச்சிட்டு ஊர ஏமாத்துறாங்க” என்றார். இதனால், கோவமான தாமரைச்செல்வி, “தம்பி பட்டையைப் பற்றி பேசுனா எனக்கு கோவம் வந்துடும்” என்றார். மேலும் அண்ணாச்சியை அழைத்த தாமரைச்செல்வி, ”அண்ணேன் இந்த தம்பி பட்டையைப் போட்டு ஊர ஏமாத்துராங்கனு என்னைப் பார்த்துச் சொல்கிறார்” என்றார். உடனே இமான் அண்ணாச்சி, ”அப்படியா சொன்னான்… போ… இந்த பையனுக்கு 2 லட்சம் ஓட்டுபோச்சு” என்கிறார்.

இதையடுத்து தாமரைச்செல்வி வெற்றி வேல் முருகனுக்கு… வீர வேல் முருகனுக்கு என்று பாட்டுப்பாடுகிறார். இதனையடுத்து என்ன நினைத்தார் என்று தெரியவில்லை அபிஷேக் ராஜா, தாமரையின் காலில் விழுகிறார். எங்கடா வீட்டில் சண்டை ஆரம்பமாகுமோ என்று நினைத்த நேரத்தில் அபிஷேக் தாமரையின் காலில் விழுந்து சண்டையைச் சமாதானமாக்கினார். இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 5-ல் அபிஷேக் ராஜா நிச்சயம் டிஆர்பி ரேட்டை உயர்த்தும் வகையில் பயன்படுத்தப்படுவார் என நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள்.

 

google news
Continue Reading

More in Biggboss Tamil 5

To Top